கொரோனாவால் பெற்றோரை இழந்த.. குழந்தைகளின் முழு கல்வி செலவையும் அரசே ஏற்கும்.. அரவிந்த் கெஜ்ரிவால்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: கொரோனா வைரஸ் காரணமாகத் தாய்- தந்தை என இருவரையும் இழந்த குழந்தைகளின் முழு கல்வி செலவையும் அரசு ஏற்கும் என்றும் அவர்கள் 25 வயதாகும் வரை மாதம்தோறும் 2500 ரூபாய் வழங்கப்படும் என்றும் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.

நாட்டில் தற்போது கொரோனா பரவலின் 2ஆம் அலை ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 2.63 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. அதேபோல ஒரே நாளில் 4,329 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

Delhi Announces Free Education For Children Orphaned By Covid

கொரோனா 2ஆம் அலையின் வேகம் இப்போது குறைந்திருந்தாலும், அதன் பாதிப்பு மிக மிக மோசமாகவே இருந்தது. முதல் அலையை ஒப்பிடும்போது, இரண்டாம் அலையில் உயிரிழப்புகள் அதிகமாகவே இருந்தன. குறிப்பாக, டெல்லி, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் உயிரிழப்புகள் மிக அதிகமாக இருந்தன.

இந்நிலையில், கொரோனா வைரஸ் காரணமாகத் தாய்- தந்தை என இருவரையும் இழந்த குழந்தைகளின் முழு கல்வி செலவையும் அரசு ஏற்கும் என்றும் அவர்கள் 25 வயதாகும் வரை மாதம்தோறும் 2500 ரூபாய் வழங்கப்படும் என்றும் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.

அதேபோல கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். மேலும், கொரோனாவை கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ள ஏழைக் குடும்பங்களுக்கு இந்த மாதம் 10 கிலோ ரேசன் பொருட்கள் இலவசமாக வழங்கப்படும் என்றும் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+