டெல்லி சட்டசபை தேர்தல் 2025: பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி இன்று தீவிர பிரசாரம்
டெல்லி: டெல்லி சட்டசபை தேர்தல் வரும் 5 ஆம் தேதி நடக்கிறது. ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் கட்சிகளிடையே கடும் போட்டி நிலவுகிறது. நாளையுடன் பிரசாரம் ஓய உள்ள நிலையில், அனைத்து கட்சிகளும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன. பிரதமர் மோடி இன்று டெல்லியில் பிரசாரம் மேற்கொள்ள உள்ளார். பாஜக வேட்பாளர்களை ஆதரித்து இன்று பிரதமர் மோடி டெல்லியில் வாக்கு சேகரிக்க உள்ளார்.
தலைநகர் டெல்லியில் வரும் 5 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. தற்போது ஆம் ஆத்மி ஆட்சியில் உள்ளது. 2014 முதல் டெல்லியில் ஆட்சியில் இருக்கும் ஆம் ஆத்மியை வீழ்த்தி இந்த முறை ஆட்சியை பிடிப்பதில் பாஜக தீவிரம் காட்டி வருகிறது. அதேபோல, இந்த முறையும் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைப்பதில் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளது.

டெல்லியில் ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இடையே மும்முனை போட்டி நிலவினாலும் பாஜக - ஆம் ஆத்மி இடையேதான் கடும் போட்டி நிலவும் எனத் தெரிகிறது. பாஜக, ஆம் ஆத்மி தலைவர்கள் சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். பாஜக - ஆம் ஆத்மி இடையே யமுனை நதி விவகாரத்தில் வார்த்தை மோதல் ஏற்பட்டு அரசியல் களம் கொதிக்கிறது.
டெல்லியில் வரும் 5 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் நாளையுடன் பிரசாரம் ஓய்கிறது. இதனால் இறுதி கட்ட பிரசாரத்தில் அரசியல் கட்சிகள் ஈடுபட்டு வருகின்றன. பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி கடந்த சில நாட்களாக பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் இன்றும் தீவிர பிரசாரத்தில் பிரதமர் மோடி ஈடுபடுகிறார். டெல்லியில் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி இன்று பிரசாரத்தில் ஈடுபட உள்ளார்.
முன்னதாக நேற்று முன் தினம் துவாரகா பகுதியில் பிரதமர் மோடி, பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்தார். அப்போது பிரதமர் மோடி பேசியதாவது:- டெல்லியில் பல ஆண்டுகளாக காங்கிரஸ் ஆட்சி நடைபெற்றது. அதன் பிறகு இந்த ஆப்டா AAPda(பேரழிவு) ஆட்சி நடைபெற்று வௌர்கிறது. இந்த நாட்டுக்கு சேவையாற்ற பலமுறை எனக்கு வாய்ப்பளித்து உள்ளீர்கள்.
தற்போது, இந்த இரட்டை என்ஜின் அரசுக்கு சேவையாற்ற வாய்ப்பு அளிக்க வேண்டும் என்று நான் கோரிக்கை வைக்கிறேன். டெல்லியின் வளர்ச்சிக்கு நான் உறுதியளிக்கிறேன். டெல்லி வளர்ச்சிக்கு முன் இருக்கும் எந்த ஒரு வாய்ப்பையும் நான் விட்டு விட மாட்டேன்" என்றார். பிரசாரம் நாளையுடன் ஓய்வதால், காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகளும் இன்று தீவிர பிரசாரத்தில் ஈடுபட உள்ளன.












Click it and Unblock the Notifications