விவசாயிகள் போராட்டம்..கொச்சைப்படுத்தும் பாஜகவுக்கு எதிராக வரிந்து கட்டும் காங், அகாலி தள், சமாஜ்வாதி
டெல்லி: மத்திய அரசின் விவசாய சட்டங்களை எதிர்த்து டெல்லியில் பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் ஒரு மாதத்தை தாண்டி தொடருகிறது. இந்த நிலையில் விவசாயிகள் போராட்டத்தை நக்சல்கள், பிரிவினைவாதிகள் என கொச்சைப்படுத்தும் பாஜக தலைவர்களுக்கு பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங், சிரோமணி அகாலி தள் மற்றும் சமாஜ்வாதி கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
மத்திய அரசின் விவசாய சட்டங்கள் திரும்பப் பெற வேண்டும் என்று போராடும் விவசாயிகளின் கோரிக்கை. ஒரு மாதம் என்ன 6 மாதங்களானாலும் சரி 2024 ஆம் ஆண்டானாலும் சரி தொடர்ந்து போராடுவோம் என்பது விவசாயிகள் நிலைப்பாடு.
இதனிடையே டெல்லியில் போராட்டம் நடத்தும் விவசாயிகளை அர்பன் நக்சல்கள், நக்சல்கள், காலிஸ்தான் பிரிவினைவாதிகள் என சகட்டுமேனிக்கு பாஜக தலைவர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர். பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் இந்த விமர்சனங்களை கடுமையாக கண்டித்துள்ளார்.

அமரீந்தர் சிங் ஆவேசம்
இது தொடர்பாக அமரீந்தர் சிங் கூறியதாவது: டெல்லியில் போராடுவது பஞ்சாப் விவசாயிகள் மட்டும் அல்ல. பாஜக ஆளும் ஹரியானா, உத்தரப்பிரதேச மாநிலங்களின் விவசாயிகளும்தான் டெல்லி போராட்டங்களில் பங்கேற்றுள்ளனர். இவர்கள் அத்தனை பேரும் நக்சல்கள் எனில் நீங்கள் ஆட்சி செய்யும் மாநிலங்களில் சட்டம் ஒழுங்கு அவ்வளவு மோசமாக இருக்கிறது என்பதுதான் அர்த்தம் அல்லவா?

பாஜகவுக்கு கண்டனம்
போராடும் விவசாயிகளின் குரல்களுக்கு மதிப்பளிக்க வேண்டும். அதைவிட்டுவிட்டு விவசாயிகளின் போராட்டங்களை கொச்சைப்படுத்தி அவதூறாக பேசுவது சரியான அணுகுமுறை இல்லை. பாஜக தலைவர்களின் ஆத்திரமூட்டும் பேச்சுகளை போராடும் விவசாயிகள் புறந்தள்ளிவிடுங்கள். அமைதிவழியில் போராடும் விவசாயிகளுக்கு ஏதேனும் ஒரு முத்திரை குத்துகிற போக்கை பாஜக கைவிட வேண்டும். இவ்வாறு அமரீந்தர்சிங் கூறினார்.

அகாலிதள் எதிர்ப்பு
சிரோமணி அகாலிதளத்தின் விவசாய சங்க தலைவர் சிகந்தர் சிங் வெளியிட்டுள்ள அறிக்கையில், உழைத்து போராடும் விவசாயிகள் மீது எளிதாக ஏதேனும் ஒரு முத்திரை குத்திவிட்டுப் போகும் போக்கை பாஜக கைவிட வேண்டும். இத்தகைய கருத்துகளை வெளியிடும் தலைவர்களுக்கு எதிராக போராட்டங்கள் நடத்தப்படும் என்றார்.

சமாஜ்வாதி கட்சி வார்னிங்
இதனிடையே சமாஜ்வாதி கட்சி மூத்த தலைவர் ராம்கோவிந்த் செளத்ரி, விவசாய சட்டங்களை ஆதரிக்கின்ற தலைவர்களை உங்கள் கிராமங்களுக்குள் நுழைய விடாதீர்கள். அத்தகைய தலைவர்களை புறக்கணிப்பு செய்யுங்கள் என அழைப்பு விடுத்துள்ளார்.
-
திமுகவையே ஓவர்டேக் செய்த எடப்பாடி.. அதிமுக – பாஜக தொகுதி பங்கீட்டில் இப்படி நடந்ததே இல்லை! பின்னணி -
அவிநாசி அல்லது மேட்டுப்பாளையம்.. 2ல் ஒரு தொகுதியில் போட்டியிடும் மத்திய இணையமைச்சர் எல்.முருகன்? -
"பிராமணர் + வன்னியர் + தேவர்" ஓட்டுக்கு வேட்டு! அதிமுக - பாஜக கூட்டணிக்கு டென்ஷன் ஏற்றும் மூவர் -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
இன்னும் சற்று நேரத்தில் NDA கூட்டணி தொகுதிப் பங்கீடு.. அதிமுக அலுவலகத்துக்கு விரைந்த பியூஷ் கோயல் -
சிங்காநல்லூர் அல்லது கவுண்டம்பாளையம்.. ஒரு தொகுதியை கொடுங்க.. பியூஷ் கோயலிடம் கேட்ட அண்ணாமலை? -
3 முறை பிரதமர்.. பாஜகவிற்கே எடப்பாடி 27 தான் தந்துள்ளார்.. காங்கிரசுக்கு 28.. திமுகவினர் குமுறல் -
மதுரை வடக்கில் சரவணனுக்கு சீட் இல்லையா? தாமரை சின்னத்தில் களமிறங்கும் திருமாறன்.. பின்னணியில் மூவர்! -
முடிவுக்கு வரும் பாஜக பஞ்சாயத்து.. தமிழகம் வந்த பியூஸ் கோயல்! அமித் ஷாவுக்கு எடப்பாடி ஓகே சொல்வாரா? -
பாஜக உள்ளே புகுந்துருச்சு ப்ரோ.. ஆண்டுக்காண்டு அதிகரிக்கும் சீட் எண்ணிக்கை! 20ஐ 27ஆக்கிய அமித் ஷா! -
பாஜகவுக்கு பல்ப் கொடுத்த எடப்பாடி..40 கேட்ட பாஜகவுக்கு 27! ஒரே நாளில் முடிந்த டீலிங்..கெத்து அதிமுக! -
Election Commission: தேர்தல் ஆணைய கடிதத்தில் பாஜகவின் முத்திரை.. கேரள அரசியல் கட்சிகள் அதிர்ச்சி.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications