டெல்லியில் இரசாயன ஆலையில் தீ விபத்து..தீயணைப்பு வீரர்கள் கடும் போராட்டம்.. பகீர்!
டெல்லியில் உள்ள ஷாடரா இரசாயன ஆலையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
டெல்லி: டெல்லியில் உள்ள ஷாடரா இரசாயன ஆலையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
டெல்லி ஷாடரா ஜில்மில் பகுதியில் இந்த சம்பவம் நடைபெற்று இருக்கிறது. அங்கு இருக்கும் ஷாடரா இரசாயன ஆலை பல வருடங்களாக இயங்கி வருகிறது. இந்த நிலையில் இன்று மாலை 7 மணிக்கு அங்கு சிறிய தீ விபத்து ஏற்பட்டது.
இந்த சிறிய தீ விபத்து வேகமாக கட்டிடம் முழுக்க பரவியது. அது நான்கு மாடிகள் கொண்டு பெரிய கட்டிடம் ஆகும். கட்டிடம் முழுக்க தீ வேகமாக பரவியது.
இதன் உள்ளே மிகுந்த ஆபத்து வாய்ந்த ரசாயனங்கள் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இந்த தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் கடுமையாக போராடி வருகிறார்கள். மின்சார கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டு இருக்கிறது.
Delhi: Fire breaks out at a chemical factory due to short circuit in Jhilmil Industrial Area. 26 Fire tenders present at the spot. More details awaited. pic.twitter.com/89hPGEcHUF
— ANI (@ANI) April 25, 2019
மொத்தம் 26 தீயணைப்பு வீரர்களின் குழுக்கள் அந்த பகுதிக்கு தற்போது சென்றுள்ளது. இதுவரை இந்த தீ விபத்தால் யாரும் பலியானதாக தகவல்கள் வெளியாகவில்லை.