“ஹை அலர்ட்டில்” டெல்லி.. ஜி20 யில் குவியப்போகும் வெளிநாட்டு தலைகள் - மெட்ரோ நிலைய வாயில்கள் குளோஸ்
டெல்லி: ஜி 20 மாநாட்டிற்காக உலகத் தலைவர்கள் டெல்லிக்கு வரவுள்ள நிலையில் பாதுகாப்பு கருதி மெட்ரோ ரயில் நிலையங்களில் முக்கிய வழிகள் அடைக்கப்படுவதாக டெல்லி மெட்ரோ நிர்வாகத்துக்கு மெட்ரோ உதவி காவல் கண்காணிப்பாளர் கடிதம் எழுதி இருக்கிறார்.
அவர் எழுதிய கடிதத்தில், "டெல்லியில் நடைபெற இருக்கும் ஜி20 மாநாட்டுக்காக பல்வேறு பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம். வெளிநாட்டு தலைவர்கள் இந்தியா வருகை தந்து திரும்பி செல்லும் வரை செப்டம்பர் 8 ஆம் தேதி முதல் செப்டம்பர் 10 ஆம் தேதி வரை கீழ்காணும் மெட்ரோ ரயில் நிலைய கதவுகளை மூட வேண்டும்.

இந்திரா காந்தி சர்வதேச விமான நிலைய மெட்ரோவில் உள்ள ஒரு கேட் திறந்து இருக்க வேண்டும். ஏரோ சிட்டி, தௌலா கவுன், தெற்கு வளாகம், துவாரகா செக்டார் 21, மெட்ரோ ரயில் நிலையங்களின் அனைத்து கேட்களும் திறந்திருக்க வேண்டும்.
கான் மார்க்கெட் மெட்ரோ ரயில் நிலையத்தில் 4 கேட்டுகள் உள்ள நிலையில் 1, 2, 3 ஆம் எண் கேட்களை மூடி இருக்க வேண்டும் என்றும், 4 வது கேட்டை மட்டுமே திறந்து வைக்க வேண்டும். கைலாஷ் காலனி மெட்ரோ ரயில் நிலையத்தின் கதவு எண் 2 ஐ மூட வேண்டும். முதல் கதவை திறக்கலாம்.
மூல்சந்த் மெட்ரோ ரயில் நிலைய வாயிலை மூட வேண்டாம். லஜ்பத் நகர் மெட்ரோ ரயில் நிலையத்தின் 5 கதவுகளில் 5 ஆம் எண் வாயிலை தவிர மற்ற 4 வாயில்களை மூட வேண்டும். ஆஷ்ரம் மெட்ரோ ரயில் நிலையத்தின் 2 ஆம் எண் வாயிலை தவிர, 1 மற்றும் 3 ஆம் எண் வாயில்களை மூட வேண்டும்.
6 வாயில்களை கொண்ட பாரகம்பா மெட்ரோ ரயில் நிலையத்தில் 2 ஆம் எண் வாயிலை மட்டுமே திறக்க வேண்டும். உச்சநீதிமன்ற மெட்ரோ ரயில் நிலையத்தின் அனைத்து வாயில்களையும் அடைக்க வேண்டும். இந்திரபிரஸ்தா மெட்ரோ ரயில் நிலையத்தின் முதலாம் எண் வாயிலை மட்டும் திறக்கலாம்.
மோடி பாக் மெட்ரோ ரயில் நிலையத்தின் 2 வாயில்களை அடைக்க வேண்டும். பாகாகொ கமா ப்ளே மெட்ரோ ரயில் நிலையம், முனிர்கா மெட்ரோ ரயில் நிலையம், ஆர்.கே.புரம் மெட்ரோ ரயில் நிலையம், ஐஐடி, சதார் பஜார் கண்டோன்மெண்ட் மெட்ரோ ரயில் நிலைய ஆகியவற்றில் அனைத்து வாயில்களையும் அடைக்க வேண்டும்.
ஹவுஸ் காஸ் மெட்ரோ ரயில் நிலையத்தின் வாயில் எண்கள், 1, 2, 4 ஆகியவை மூடப்பட்டு, 3 ஆம் எண் வாயிலை மட்டுமே திறக்க வேண்டும். மால்வியா நகர் மெட்ரோ ரயில் நிலைய கதவு எண் 3, 4 மூடப்பட்டு 1, 2 ஐ திறக்கலாம். பாலம் மெட்ரோ ரயில் நிலையத்தின் 3 எண் வாயில், மத்திய தலைமை செயலக மெட்ரோ ரயில் நிலையத்தின் 3, 4 வது வாயில்களை அடைக்க வேண்டும்.
உத்யோக் பவன் மெட்ரோ ரயில் நிலையத்தின் 1, 3 வது எண் வாயில்களை மூட வேண்டும். லோக் கல்யான் மார்க்கில் 2 வது எண் வாயில், மந்தி ஹவுஸ் மெட்ரோ ரயில் நிலையத்தின் 2, 3, 4 ஆகிய வாயில்கள், ஐடிஓ மெட்ரோ ரயில் நிலையத்தின் 2, 3, 4, 5, 6 ஆகிய எண் வாயில்கள், டெல்லி கேட் மெட்ரோ ரயில் நிலையத்தின் 1, 2, 4, 5 ஆகிய வாயில்கள் மூடப்படும்.
அதே நேரம் சிராக் டெல்லி, பஞ்சசீல பூங்கா, கிரேட்டர் கைலாஷ், நேரு என்கிலேவ், கல்காஜி மந்திர், ஓக்லா என்.எஸ்.ஐ.சி., ராஜீவ் சவுக், சவ்ரி பஜார், சாந்தினி சவுக் ஆகிய மெட்ரோ ரயில் நிலையத்தின் அனைத்து வாயில்களும் திறக்கப்படும். இந்த பாதுகாப்பு பணியின்போது மெட்ரோ நிலைய வாயில்கள் அடைப்பது தொடர்பான கோரிக்கைகள் வந்தால் உடனடியாக நிறைவேற்ற வேண்டும்." என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி












Click it and Unblock the Notifications