தண்டவாளத்தில் சென்ற 3 பெண்கள்.. கன நொடியில் தள்ளிவிட்டு உயிரை கொடுத்து காப்பாற்றிய கான்ஸ்டபிள்
Recommended Video
டெல்லி: ரயிலில் அடிபடாமல் 3 பெண்களை கடைசி நொடியில் தள்ளிவிட்டு காப்பாற்றிய, ரயில்வே கான்ஸ்டபிள் ரயில் மோதி நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இது தொடர்பாக ரயில்வே டிசிபி டிகே குப்தா கூறுகையில், ரானா(51) என்ற ரயில்வே போலீஸ் கான்ஸ்டபிள், தண்டவாளத்தில் யாரும் செல்கிறார்களா, வழிபறி செய்யும் நோக்கில் யாரும் இருக்கிறார்களா என்பதை ஞாயிற்றுக்கிழமை இரவு 9.45 மணி அளவில் அஜத்பூர் பகுதியில் ரோந்து சென்று சென்றுள்ளார்.
அப்போது சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில் சென்று கொண்டிருந்த பாதையில் 3 பெண்கள் சென்று கொண்டிருப்பதை பார்த்து கூச்சலிட்டுள்ளார். அதேநேரம் ரயில் ஓட்டுனரும் எச்சரிக்கும் விதமாக ஹாரன் அடித்துள்ளார்.

காப்பாற்றினார்
ஆனால் அந்த பெண்கள் அதனை கவனிக்காமல் சென்று கொண்டே இருந்துள்ளனர். இந்நிலையில் எதிர் தண்டவாளத்தில் இருந்த ரானா ஓடிவந்து ரயில் வருவதற்கு ஒரு சில வினாடிக்கு முன்பு வந்து 3 பெண்களையும் தண்டவாளத்தை விட்டு தள்ளிவிட்டுள்ளார். இதனால் அவர்கள் உயிர் தப்பினர்.

பெண்கள் அலறல்
ஆனால் கண் இமைக்கும் நேரத்தில் ரானா மீது ரயில் வேகமாக மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதனை பார்த்து அலறிய 3 பெண்களும் உடனடியாக அருகில் இருந்த அஜாத்பூர் ரயில்வே பாதுகாப் படை கன்ட்ரோல் ரூமுக்கு தகவல் கொடுத்தனர். அங்கு ரயில்வே அதிகாரிகள் பொதுமக்கள் விரைந்து வந்து ரானாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இவ்வாறு கூறினார்.

பிரேத பரிசோதனை
மூன்று பெணகளையும் தள்ளிவிட்டு காப்பற்றிய ரானா ஒரு காலை தண்டவாளத்திலும் மற்றொரு காலை வெளியிலும் வைத்து கடக்க முயற்சித்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக தவறி தண்டவாளத்தில் விழுந்ததே அவர் உயிரிழக்க காரணம் என கூறப்படுகிறது. தலையில் அதிக ரத்தம் வெளியேறியதே ரானா உயிரிழப்பு காரணம் என பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரியவந்துள்ளது.

போலீசார் வழக்கு
ஹரியானா மாநிலம் குட்டாபார்க்கில் ரானா தனது குடும்பத்தினருடன் வசித்து வந்தார். இவர் டெல்லியில் ஆர்பிஎப் போலீசில் வேலை பார்த்து வந்துள்ளார். இப்போது ரானா உயிரிழந்துவிட்டதால், அவரது மனைவி கணவனையும், அவரது பிள்ளைகள் தந்தையையும் இழந்து தவிக்கிறார்கள். மூன்று பெண்களை ரயில் அடிபடாமல் காப்பற்றிய போலீஸ்காரர் அதற்காக உயிரை விட்ட சம்பவம் டெல்லியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. கவனக்குறைவாக சென்ற மூன்று பெண்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட வாய்ப்பு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அவர்களிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
-
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்!












Click it and Unblock the Notifications