தீவிரவாத செயலில் ஈடுபட்டவரை எம்பியாக்கிய உங்களை நம்ப முடியாது.. பாஜகவை விளாசிய திக்விஜய் சிங்
டெல்லி: சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தில் (UAPA - உபா சட்டம்) மத்திய அரசு மாற்றம் கொண்டு வர முடிவு செய்து லோக்சபாவில் அதிமுக, திமுக ஆதரவுடன் அதை நிறைவேற்றியுள்ளது.
தனிப்பட்ட ஒருவரை தீவிரவாதி அல்லது தீவிரவாத இயக்கத்துடன் தொடர்புடையவர் என்று இந்த சட்டம் மூலம் கைது செய்து விசாரிக்க முடியும் என்பதால் பொது சமூகத்தில் இந்த சட்டம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இன்று ராஜ்யசபாவில் உபா சட்டத் திருத்தம் தாக்கல் செய்யப்பட்டதும், ப.சிதம்பரம், திக் விஜய் சிங் போன்ற மூத்த தலைவர்கள், அதன் மீது உரையாற்றினர். இந்த சட்டத் திருத்தத்திற்கு, காங்கிரஸ் சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
திக்விஜய் சிங் பேசுகையில் கூறியதாவது: மத்திய அரசு இந்த சட்டத்தை கொண்டு வருவதற்கான உள்நோக்கத்தை நாங்கள் சந்தேகிக்கிறோம். ஏனெனில் காங்கிரஸ் எப்போதுமே தீவிரவாதிகள் விஷயத்தில் சமரசம் செய்து கொண்டது இல்லை. பாஜக அவ்வாறு செய்துகொண்டுள்ளது.
தீவிரவாத செயலில் ஈடுபட்டவர் என்று குற்றம்சாட்டப்பட்டவருக்கு பாஜக தலைமை டிக்கெட் கொடுத்து போட்டியிடச் செய்து எம்பியாக்கியுள்ளது. எனவே, இந்த சட்டத்தை நிலைக்குழு பரிசீலனைக்கு அனுப்ப வேண்டும். மேலும், குஜராத்திலிருந்து வந்த சர்தார் வல்லபாய் பட்டேல் வகிக்கும் பதவியைதான் இப்போது அமித்ஷாவும் வகிக்கிறார். ஏன் பாஜக தலைமை பதவியை நீங்கள் ஜேபி நட்டாவுக்கு விட்டுக் கொடுக்க கூடாது? என்று திக்விஜய் சிங் கேள்வி எழுப்பினார்.
இதனிடையே, ராஜ்யசபாவிலும், உபா சட்டம் நிறைவேறியது. குண்டு வெடிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட பிரக்யா சிங் தாக்கூர் பாஜக சார்பில் எம்பியாகியுள்ளதைத்தான், திக்விஜய் சிங் இவ்வாறு மறைமுகமாக விமர்சனம் செய்ததாக கூறப்படுகிறது.
-
ராஜ்யசபா சீட்.. ஓகே சொன்ன விஜய்! 3 மாதங்களில் 2 எம்பிக்கள்! கணக்கு போட்டு தூக்கிய காங்கிரஸ்! -
பாத்து பண்ணி விடுங்க.. ராஜ்யசபா சீட்டுக்கு அடி போடும் காங்.,? விஜய்யிடம் நேரில் பேசிய ப.சிதம்பரம்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்? -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications