Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கண்டெய்னரை மடக்கிபிடித்த ஐபிஎஸ்.. மத்திய அரசு பணிக்கு மாற்றப்பட்ட திண்டுக்கல் டிஐஜி வந்திதா பாண்டே!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: திண்டுக்கல் சரக டிஐஜி-யாக பணியாற்றி வரும் வந்திதா பாண்டே, மத்திய அரசு பணிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். மத்திய அரசின் இளைஞர் விவகாரத்துறை இயக்குநராக நியமனம் செய்யப்பட்டுள்ள அவர், அடுத்த அறிவிப்பு வரும் வரை மத்திய அரசு பணியிலேயே தொடர்வார் என்று தெரிய வந்துள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம் அலகாபாத்தைச் சேர்ந்தவர் வந்திதா பாண்டே. 2010ஆம் ஆண்டு ஐபிஎஸ் பேட்ஜ் அதிகாரி. இவர் 2013ஆம் ஆண்டு விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் ஏஎஸ்பி-யாக பணியில் சேர்ந்தார். அதன்பின் 2014ஆம் ஆண்டு சிவகங்கை மாவட்ட ஏஎஸ்பி-யாக நியமனம் செய்யப்பட்டார். சிவகங்கை மாவட்டத்தில் ஏஸ்பி-யாக இருந்த போது, உயர் காவல்துறை அதிகாரிகள் மற்றும் விஐபி-க்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சிறுமி வழக்கில் உண்மையை பெற்று அந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்தவர்.

vandita pandey dindigul delhi

இதனால் வந்திதா பாண்டேவின் பெயர் தமிழ்நாடு முழுவதும் பிரபலமாகியது. இதனைத் தொடர்ந்து கரூர்-க்கு மாற்றப்பட்ட போது, 2016 சட்டப்பேரவை தேர்தலில் அரவக்குறிச்சி அருகே கண்டெய்னரில் கொண்டு செல்லப்பட்ட ரூ.570 கோடியை மடக்கி பிடித்து இந்தியாவையே அதிர வைத்தார். அதன்பின் அதிமுக ஆட்சி காலத்தில் வந்திதா பாண்டே சாதாரண பிரிவுகளுக்கு மாற்றப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து திமுக ஆட்சிக்கு வந்த பின் 2022ஆம் ஆண்டு புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக நியமனம் செய்யப்பட்டார். இதன்பின் கடந்த ஆண்டு இறுதியில் வந்திதா பாண்டேவுக்கு டிஐஜி-யாக பதவி உயர்வு அளிக்கப்பட்டது. தற்போது திண்டுக்கல் மாவட்ட டிஐஜி-யாக பணியாற்றி வருகிறார். இவரும் திருச்சி மாவட்ட டிஐஜி வருண் குமாரும் திருமணம் செய்த பின், பிரபலமான ஜோடியாக வலம் வருகின்றனர்.

இந்த நிலையில் திண்டுக்கல் சரக டிஐஜியாக பணியாற்றி வரும் வந்திதா பாண்டே, மத்திய அரசு பணிக்கு மாற்றம் செய்யப்பட்டு உத்தரவிடப்பட்டுள்ளது. சில மாதங்களுக்கு முன்பாக மத்திய அரசு பணிக்கு செல்ல வந்திதா பாண்டே விண்ணப்பித்திருந்தார். இதனைத் தொடர்ந்து மத்திய அரசின் இளைஞர் விவகாரத்துறை இயக்குநராக வந்திதா பாண்டே நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இதனால் மத்திய அரசுப் பணியில் 5 ஆண்டுகள் வரை பணியாற்ற வாய்ப்புகள் உள்ளது. அதேபோல் அடுத்தக்கட்ட உத்தரவு வரும் வரை வந்திதா பாண்டே மத்திய அரசு பணியிலேயே தொடரவும் வாய்ப்புகள் உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+