மரத்தைக் கீறினா.. கொட்டுது பாருங்க தண்ணீர்.. ஆஹா இயற்கையின் பெரும் கொடை!.. வைரலாகும் படம்
டெல்லி: ஒரு மரத்தின் பட்டையை கீறினால் அப்படியே தண்ணீர் கொட்டுகிறது. இந்த செய்தி தொடர்பான புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.
இந்த புகைப்படங்களை திக் விஜய் சிங் கட்டி என்பவர் வெளியிட்டுள்ளார். காடுகளில் தண்ணீர் தேவை அதிகமாக இருக்கும். அதிலும் வெயில் காலங்களில் நீர் நிலைகளில் தண்ணீர் வற்றி விடும்.
அந்த சுழல்களில் கைக் கொடுப்பதுதான் மரங்கள். முதலை கட்டை மரம் என்ற ஒரு மரத்தை கேள்விப்பட்டுள்ளீர்களா. ஆம் இந்த மரத்தின் பட்டைகள் பார்ப்பதற்கு கரடுமுரடாக முதலை தோல் போல் இருக்கும். இந்த மரத்தை அறிவியல் ரீதியில் டெர்மினாலியா எலிப்டிகா என அழைக்கப்படுகிறது.

மரவெட்டி
அந்த மரத்தின் பட்டையை மரவெட்டியால் ஓங்கி அடித்தால் அதிலிருந்து தண்ணீர் பிய்த்து கொண்டு கொட்டுகிறது. அந்த தண்ணீர் குடிப்பதற்கு மிகவும் நன்றாக இருக்கும். மிகவும் வறட்சியான நேரங்களில் இந்த மரத்திலிருந்து தண்ணீர் எடுத்துக் கொள்ளலாம்.

கரடுமுரடு
இந்த மரம் பொதுவாக இந்தியா, நேபாளம், வங்கதேசம், மியான்மர் ஆகிய இடங்களில் வளரும். இது வறண்ட மற்றும் ஈரப்பதமான ஊசியிலை காடுகளில் வளரும் தன்மை கொண்டது. இந்த மரங்களின் பட்டைகள் மிகவும் கரடுமுரடாக இருக்கும். மேலும் தீத்தடுப்பானாகவும் இருக்கிறது.

படைப்பு
கோடை காலங்களில் இந்த மரத்தில் உள்ள நீரை வனத்துறை அதிகாரிகள் குடிப்பர். இந்த தண்ணீரை குடித்தால் வயிற்று வலியை குறைக்கும் என்கிறார்கள். இயற்கை எத்தனை அற்புதமான ஒரு படைப்பை கொடுத்துள்ளது. ஆனால் நாம் தாம் அதன் அற்புதங்களை தெரிந்து கொள்ளாமல் மரங்களை வெட்டி காட்டை அழித்து வருகிறோம்.
Recommended Video

இயற்கை
இந்த தண்ணீர் கசிவை எவ்வாறு நிறுத்துவது என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். அது சிறிது காலத்திற்கு அப்படியே இருக்கும். பின்னர் அதுவாகவே இயற்கையாக வறண்டுவிடும். இது சேமிக்கப்பட்ட தண்ணீர் என்று தெரிவித்துள்ளார். இந்த மரத்தின் எந்த முறை மூலம் தண்ணீர் சேமிக்கப்படுகிறது என்பது தெரியவில்லை.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications