அரசியல் சாசனத்தை பாஜக ஒழிக்கும் என பிரசாரம் செய்யக் கூடாது.. காங்கிரஸுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு!
டெல்லி: நாட்டின் அரசியல் சாசனத்தை பாஜக ஒழித்துவிடும் என்று லோக்சபா தேர்தல் பிரசாரங்களில் காங்கிரஸ் பேச்சாளர்கள் பேசக் கூடாது என அக்கட்சிக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அத்துடன் நாட்டின் ராணுவ விவகாரங்களையும் தேர்தல் பிரசாரங்களில் பேசக் கூடாது எனவும் காங்கிரஸுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
18-வது லோக்சபா தேர்தல் இறுதிக் கட்டத்தை எட்டியிருக்கிறது. இதுவரை 5 கட்ட தேர்தல்கள் நடைபெற்று முடிவடைந்துள்ளன. 6-வது கட்ட தேர்தல் நாளை மறுநாள் மே 25-ந் தேதி நடைபெற உள்ளது.

லோக்சபா தேர்தல் பிரசாரங்களில் தலைவர்கள் பேசும் பேச்சுகள் தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையத்திடம் புகார்கள் குவிந்து கொண்டே இருக்கின்றன. இதனையடுத்து பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகளின் தலைவர்களான ஜேபி நட்டா, மல்லிகார்ஜூன கார்கேவுக்கு இந்திய தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது.
இந்திய தேர்தல் ஆணையம் அனுப்பிய நோட்டீஸில், சமூகத்தில் பிளவுகளை ஏற்படுத்தக் கூடிய பிரசாரங்களை கட்சிகளின் நட்சத்திர பேச்சாளர்கள் பேசக் கூடாது என அறிவுறுத்த வேண்டும்; மதம், ஜாதி அடிப்படையில் பிரசாரம் செய்வதைத் தவிர்க்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவுக்கு அனுப்பப்பட்ட நோட்டீஸில், இந்திய அரசியல் சாசனத்தை பாஜக ஒழித்துவிடும் என்கிற தவறான தகவலையும் கருத்தையும் பரப்பக் கூடாது. அக்னி வீரர் திட்டம் தொடர்பாக விமர்சிக்கும் போது நாட்டின் ராணுவ விவகாரங்களை அரசியலாக்கக் கூடாது எனவும் சுட்டிக்காட்டியிருக்கிறது இந்திய தேர்தல் ஆணையம்.
அத்துடன், இரு கட்சிகளின் தலைவர்களும் தொடர்ந்து பரஸ்பர குற்றச்சாட்டுகளை முன்வைக்கக் கூடாது; இரு கட்சிகளின் பேச்சாளர்களும் நிதானத்துடன் பேச வேண்டும். அதிகாரத்தில் இருப்பதால் கட்சிகள் கூடுதல் பொறுப்புடன் நடக்க வேண்டும்; எதிர்க்கட்சிகள் வரம்பை மீறவும் கூடாது எனவும் தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி உள்ளது.
லோக்சபா தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் மோடி தொடர்ந்து இஸ்லாமியர்கள் குறித்து பேசி வருகிறார். காங்கிரஸ்தான் முஸ்லிம்களுக்கு சொத்துகளை வாரி கொடுக்கப் போகிறது; இடஒதுக்கீட்டை ரத்து செய்து முஸ்லிம்களுக்கு மட்டும் இடஒதுக்கீடு தரப் போகிறது எனவும் பேசி வருகிறார் பிரதமர் மோடி.
மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட "இந்தியா" கூட்டணி தலைவர்கள், மத்தியில் மீண்டும் பாஜக ஆட்சிக்கு வந்தால் இந்திய அரசியல் சாசனத்தை ஒழித்துவிடுவார்கள் என குற்றம்சாட்டி வருகின்றனர்.
-
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சொதப்பிட்டீங்களே.. இப்போ பாருங்க போக முடியல.. கடுப்பான விஜய்.. காரணம் புஸ்ஸி, ஆதவ்? என்னாச்சு? -
திடீரென வீடியோ வெளியிட்டு மதுரை மத்திய தொகுதி வேட்பாளர் சுந்தர் சி உருக்கம்! பிடிஆர் இருக்காரே! -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
எவ்வளவு வேகம்! சிட்டிக்கு நடுவே வளர்ந்து நிற்கும் ஸ்டீல் ராட்சசன்.. சென்னையின் காஸ்ட்லி ப்ராஜெக்ட் -
ஸ்டாலின் தான் சிறந்த CM வேட்பாளர்.. பின்னாலேயே துரத்தும் எடப்பாடி.. விஜய்க்கு அதிர்ச்சி! புதிய சர்வே












Click it and Unblock the Notifications