எந்த விதிமீறலும் இல்லை.. பிரதமர் மோடியை மேலும் 2 புகாரில் இருந்து விடுவித்தது.. தேர்தல் ஆணையம்
Recommended Video
டெல்லி: பிரதமர் மோடியின் செயல்பாட்டில் எந்த தேர்தல் விதிமீறலும் இல்லை என்று கூறி மேலும் இரண்டு புகார்களில் இருந்து தேர்தல் ஆணையம் அவரை விடுவித்துள்ளது.
மக்களவை தேர்தல் ஏப்ரல் 11ம் தேதி நாடு முழுவதும் தொடங்கியது. தற்போது வரை ஐந்து கட்ட தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இன்னும் இரண்டு கட்ட தேர்தல் நடக்க உள்ளது. கடைசி கட்டமாக வரும் மே 19ம் தேதி மக்களவை தேர்தல் நடக்க உள்ளது. வாக்கு எண்ணிக்கை மே 23ம் தேதி நடக்கிறது.

பிரதமர் மோடி தேர்தல் அறிவிக்கப்பட்டதில் இருந்து பல்வேறு இடங்களில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அவரது பேச்சில் விதிமீறல் இருப்பதாக காங்கிரஸ் கட்சி தேர்தல் ஆணையம் புகார் அளித்து உள்ளது.
3ம் கட்டமாக மக்களவை தேர்தல் நடந்த நிலையில், குஜராத் மாநிலம் அஹமதாபாத்தில் திறந்தவெளி வாகனத்தில் கடந்த ஏப்ரல் 23ம் தேதி பிரதமர் மோடி ஒட்டுபோட சென்றார். அவரது செயல்பாடு தேர்தல் விதிமீறல் என காங்கிரஸ் கட்சி புகார் அளித்து இருந்தது.
இதேபோல், புல்வாமா தாக்குதலுக்கு இந்திய ராணுவம் பதிலடி கொடுத்தது தொடர்பாக கர்நாடகாவின் சித்ரதுர்காவில் கடந்த ஏப்ரல் 9ம் தேதி மோடி பேசியதாகவும் அதுவும் தேர்தல் விதிமீறல் என்றும் காங்கிரஸ் புகார் அளித்து இருந்தது.
இந்த இரண்டு புகார்களையும் இன்று விசாரணை நடத்திய தேர்தல் ஆணையம், பிரதமர் மோடியின் பேச்சில் எந்த விதிமீறலும் இல்லை என இரண்டு புகாரிலும் இருந்தும் அவரை விடுவித்தது. முன்னதாக ஏற்கனவே ராஜஸ்தானில் அணுகுண்டு தொடர்பான பேச்சு, மகாராஷ்டிராவில் பேசிய புல்வாமா தாக்குதல் தொடர்பான இரண்டு புகார் உள்பட சில புகார்களில் இருந்து தேர்தல் ஆணையம் மோடி பேச்சில் தவறு இல்லை என விடுவித்தது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications