Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"அமலாக்கத்துறையால் கைது செய்ய முடியும்" செந்தில் பாலாஜி வழக்கில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கருத்து

Subscribe to Oneindia Tamil

டெல்லி: செந்தில் பாலாஜி மற்றும் அவரது மனைவி மேகலா தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கு உச்ச நீதிமன்றத்தில் 2-வது நாளாக இன்று விசாரணை நடைபெற்று வருகிறது. செந்தில் பாலாஜி தரப்பில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் வாதங்களை முன்வைத்து வருகிறார். அப்போது உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சில கருத்துக்களை முன்வைத்தனர்.

அமைச்சர் செந்தில் பாலாஜி, கடந்த அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறையில் வேலை வழங்குவதாக கூறி பணம் பெற்று மோசடி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக அமலாக்கத்துறை தனியாக ஒரு வழக்கை பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கில் கடந்த ஜூன் மாதம் 14 ஆம் தேதி செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்தது. அமலாக்கத்துறை விசாரணைக்கு அழைத்து சென்ற போதே செந்தில் பாலாஜிக்கு நெஞ்சு வலி ஏற்பட்டது.

Enforcement Directorate Can Arrest: Supreme Court Judges says in Senthil Balaji Case

இதையடுத்து மருத்துவர்களின் கண்காணிப்பில் இருந்த செந்தில் பாலாஜி உடல் நலம் தேறியதையடுத்து, புழல் சிறையில் அடைக்கப்பட்டார். செந்தில் பாலாஜி தற்போது நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதற்கிடையே செந்தில் பாலாஜி மனைவி மேகலா சார்பில், சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இதையடுத்து மருத்துவர்களின் கண்காணிப்பில் இருந்த செந்தில் பாலாஜி உடல் நலம் தேறியதையடுத்து, புழல் சிறையில் அடைக்கப்பட்டார். செந்தில் பாலாஜியி தற்போது நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதற்கிடையே செந்தில் பாலாஜி மனைவி மேகலா சார்பில், சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டது.

முதலில் இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு இந்த மனு மீது விசாரணை நடத்தியது. நீதிபதிகளின் தீர்ப்பு மாறுபட்டு இருந்ததால், 3வது நீதிபதிக்கு மாற்றப்பட்டது.இந்த வழக்கை விசாரித்த மூன்றாவது நீதிபதி சி.வி கார்த்திகேயன் ஆட்கொணர்வு மனு ஏற்கத்தக்கதல்ல" எனத் தீர்ப்பளித்தார். இதையடுத்து, சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து செந்தில் பாலாஜி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்த மனு மீதான விசாரணை 2-வது நாளாக இன்றும் நடைபெற்றும் வருகிறது. அதன்படி, இன்று பிற்பகலில் மீண்டும் இந்த வழக்கு விசாரணை தொடங்கியது. செந்தில் பாலாஜி தரப்பில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் வாதங்களை முன்வைத்தார். உச்ச நீதிமன்ற நீதிபதிகள் போபன்னா மற்றும் எம்.எம் சுந்தரேஷ் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் இந்த வழக்கின் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கின் வாதத்தின் போது, அமலாக்கத்துறையால் கைது செய்ய முடியும் என்று நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

நீதிபதிகள் கூறுகையில், அதிகமான தரவுகளை பெறவே ஒருவரை விசாரணை முகமைகள் கைது செய்கின்றன. சட்ட விரோத பண பரிமாற்ற சட்டத்தின் கீழ் பணம் எங்கிருந்து வருகிறது என்பதை கண்டறியவே விசாரணை நடைபெறுகிறது. சந்தேகத்தின் பேரில் ஒருவரை கைது செய்யும் அதிகாரம் அமலாக்கத்துறைக்கு இருக்கிறது தானே... என்று நீதிபதிகள் கூறினர். அமலாக்கத்துறைக்கு கைது செய்ய அதிகாரம் இல்லை என்று செந்தில் பாலாஜி தரப்பு வாதிட்டு வரும் நிலையில், நீதிபதிகள் இவ்வாறு கருத்து தெரிவித்தனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+