அமலாக்கத்துறை அதிரடி.. ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் ரூ.538 கோடி சொத்துகள் பறிமுதல்.. பரபர பின்னணி
டெல்லி: சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பான வழக்கில் ‛ஜெட் ஏர்வேஸ்' நிறுவனத்துக்கு சொந்தமான ரூ.538 கோடி மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத்துறை அதிரடியாக பறிமுதல் செய்துள்ளது.
இந்தியாவில் ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் விமான துறையில் சிறப்பாக செயல்பட்டு வந்தது. இந்த நிறுவனத்தை நரேஷ் கோயல் தொடங்கினர். இந்த நிறுவனம் 26 ஆண்டுகளாக நன்றாக செயல்பட்டு வந்தது.

இந்நிலையில் தான் திடீரென்று நிதி நெருக்கடியில் ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் சிக்கியது. இதைடுத்து அந்த நிறுவனம் கடந்த 2019 ஏப்ரல் மாதத்துடன் செயல்பாட்டை நிறுத்தி கொண்டது.
இதையடுத்து அந்த நிறுவனத்தின் தலைவர் பொறுப்பில் இருந்து நரேஷ் கோயல் விலகினார். அதன்பிறகு நரேஷ் கோயல் தரப்பில் 2019 ஜூன் மாதம் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தை திவால் ஆனதாக அறிவிக்ககோரி தேசிய கம்பெனி சட்ட தீர்ப்பாயத்தில் (National Company Law Tribunal) மனு செய்தார்.
இதற்கிடையே தான் நரேஷ் கோயல் கனரா வங்கியில் ரூ.848.86 கோடி கடன் வாங்கியிருந்தார். இதில் அவர் ரூ.538 கோடி அளவுக்கு கடன் வாங்கி கட்டாமல் மோசடி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக கனரா வங்கி சார்பில் சிபிஐயில் புகார் செய்யப்பட்டது. சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி நரேஷ் கோயல், அவரது மனைவி அனிதா மற்றும் முன்னாள் அதிகாரிகள் மீது வழக்கப்பதிவு செய்தது.
அதோடு சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அமலாக்கத்துறை நுழைந்து விசாரணையை தொடங்கியது. அப்போது பணமோசடி செய்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து கடந்த மாதம் நரேஷ் கோயலை அமலாக்கத்துறை கைது செய்தது. அதாவது கனரா வங்கியில் வாங்கிய பணத்தை மோசடி செய்து அவர் வருமானம் ஈட்டியது தெரியவந்த நிலையில் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டது.
மேலும் அந்த வருமானம் மூலம் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும், வெளிநாடுகளிலும் சொத்துகள் வாங்கியிருப்பதையும் அமலாக்கத்துறை கண்டுப்பிடித்தது. இந்நிலையில் தான் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் சொத்துகளை அமலாக்கத்துறை அதிரடியாக பறிமுதல் செய்துள்ளது.
அதாவது பணமோசடி தடுப்பு சட்டம்(பிஎம்எல்ஏ) 2002 என்ற பிரிவின் அடிப்படையில் இந்த சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பறிமுதல் செய்யப்பட்டுள்ள சொத்துகளின் மொத்த மதிப்பு ரூ.538 கோடியாகும் என அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. பறிமுதல் செய்யப்பட்டுள்ளவற்றில் ஜெட் ஏர்வேஸ் நிறுவனர் நரேஷ் கோயல், மனைவி அனிதா கோயல், மகன் நிவான் கோயல் ஆகியோரின் சொத்துகள் அடங்கும்.
இந்தியா மட்டுமின்றி பிரிட்டனில் உள்ள லண்டன், துபாய் உள்ளிட்ட இடங்களில் உள்ள சொத்துகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதில் பங்களா, வணிக வளாகங்கள் உள்ளிட்ட 17 கட்டடங்களும் அடங்கும். மொத்தம் 17 பங்களாக்கள் அடங்கும் என அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications