யார் ஜெயிக்கப் போறாங்களோ.. எது நடக்கப் போகுதோ இல்லையோ.. இருக்கு.. இது மட்டும் கண்டிப்பா இருக்கு!
டெல்லி: தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளை பார்க்கும் போது நிச்சயம் குதிரை பேரத்துக்கு வழி வகுக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
நாடாளுமன்றத் தேர்தல் வருகிறது என்றவுடன் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து பாஜக அரசை எப்படி வீட்டுக்கு அனுப்பலாம் என ஆலோசனை நடத்தி வந்தன. இந்த நிலையில் தேர்தலும் வந்தது.
மொத்தம் 7 கட்டங்களாக நடைபெற்ற இந்த தேர்தல் நேற்றுடன் முடிவடைந்துவிட்டது. இதன் முடிவுகள் வரும் 23-ஆம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாகின்றன. இந்த முடிவுகளை அரசியல் கட்சிகளுடன் மக்களும் ஆவலோடு எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர்.

கூட்டணி
நாடாளுமன்றத்தில் ஆட்சி அமைக்க ஒரு கட்சியானது 272 இடங்களை பெற்றிருக்க வேண்டும். இதற்கு கீழ் பெறும் கட்சிகள் மற்ற கட்சிகளுடன் கூட்டணி அமைத்து அவர்களுக்கும் அமைச்சரவையில் இடம் ஒதுக்கி ஆட்சி அமைப்பது வழக்கம்.

கணிப்புகள்
இந்த நிலையில் நேற்று தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் வெளியாகின. இதில் பெரும்பாலான கருத்து கணிப்புகளில் பாஜக வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துக் கொள்ளும் என்றே கணிப்புகள் கூறுகின்றன.

பாஜக ஆட்சி
இதில் சிஎன்என், ரிபப்ளிக் சி வோட்டர், ரிப்ளிக் ஜான்கி பாத், நியூஸ் நேஷன், டைம்ஸ் நவ் ஆகிய நிறுவனங்கள் நடத்திய கருத்துக் கணிப்பில் பாஜகவுக்கு 282 முதல் 336 தொகுதிகள் கிடைக்கும் என கணிக்கப்பட்டுள்ளன. இவ்வாறு நடந்தால் பாஜக தனித்து ஆட்சி அமைக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

பாஜகவுக்கு பெரும்பான்மை
ஒரு வேளை நியூஸ் எக்ஸ் நேட்டா, ஏபிபி எசி நீசன் ஆகிய நிறுவனங்கள் நடத்திய கருத்து கணிப்பின்படி பாஜகவுக்கு முறையே 242, 267 இடங்கள் கிடைக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இதில் பாஜகவுக்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை.

ஜனாதிபதி
இந்த சூழலில் அதிக இடங்களை பெற்ற பாஜகவை ஆட்சி அமைக்க ஜனாதிபதி அழைப்புவிடுப்பார். ஆயினும் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து ஆட்சி அமைக்க பெரும்பான்மையை காண்பித்து ஆட்சி அமைக்க உரிமை கோரும். இதையடுத்து முடிவு ஜனாதிபதி கையில்தான் உள்ளது.

அரங்கேறும்
இதுபோன்ற சூழலில் அதாவது தனிபெரும்பான்மை கிடைக்காத சூழலில் எம்பிக்களை விலைக்கு வாங்க குதிரை பேரம் நடக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. இதனால் எத்தனை எம்பிக்கள் அணி தாவுவார்களோ. சுருக்கமாக சொல்லபோனால் கூவத்தூர் கூத்துகள் இங்கு அரங்கேறும் என்பதில் சந்தேகமே இல்லை.
-
தவெக அருண்ராஜ் படத்துடன்.. வாக்காளர்களுக்கு விநியோகம் செய்ய இருந்த சில்வர் பாத்திரங்கள் பறிமுதல்! -
என்னது துணை முதலமைச்சர் பதவி தராங்களா.. விஜய் தான் முதலமைச்சர்.. செங்கோட்டையன் தடாலடி -
அமெரிக்க கடற்படை உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்தது.. ஏன் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க முடியவில்லை? -
கொட்டிய ஆலங்கட்டி மழை.. கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் ஐஸ் மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி! -
"இது" இல்லை என்றால் சிலிண்டர் வராது! புக்கிங் விதிகளை திடீரென மாற்றிய மத்திய அரசு! முக்கிய அறிவிப்பு -
இப்போ வேண்டாம்.. தேர்தலுக்கு பின் ஆதரவு தருகிறேன்.. சிஎம் போஸ்ட் தாங்க.. பாஜகவிடம் பேசிய விஜய்? -
தங்க மழை கொட்ட போகுது.. PF வச்சு இருக்கீங்களா? சம்பள உச்சவரம்பு ₹25,000 ஆக உயருது? மாஸ் பிளான் -
வடிவேலுவை சினிமாவில் நுழைய விட்டதும், வளர்த்து விட்டதும் தப்பு.. ப்ளூ சட்டை மாறன் காட்டம்! பின்னணி சம்பவம் -
விஜய் ஏமாத்திட்டாரு.. பருத்தி மூட்டை குடோனிலேயே இருந்திருக்கலாம்.. திமுகவில் இணையும் செங்கோட்டையன்? -
Annamalai: 80 சீட்+ துணை முதல்வர் பதவி? பாஜக கூட்டணிக்கு விஜய் வருகிறாரா? அண்ணாமலை கொடுத்த விளக்கம் -
விஜய் வந்தால்! அதிமுக 134 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடும்? எடப்பாடி பழனிசாமியின் சீட் கணக்கு! -
வேலைக்கு ஆகாத டிரம்ப் பிளான்! அமெரிக்காவின் தலைமையை ஏற்க தயங்கும் உலக நாடுகள்! ஈரான் வெற்றி!












Click it and Unblock the Notifications