2021 பிப்ரவரிக்குள் இந்தியாவில் கொரோனா கட்டுக்குள் வரும்... மத்திய அரசுக்கு நிபுணர் குழு அறிக்கை
டெல்லி: 2021 பிப்ரவரிக்குள் இந்தியாவில் கொரோனாவை கட்டுப்படுத்தி விடலாம் என மத்திய அரசுக்கு நிபுணர் குழு அறிக்கை அளித்துள்ளது.
இந்தியாவில் கடந்த மார்ச் முதல் கொரோனா தொற்று பரவி வரும் நிலையில் அதனை கட்டுப்படுத்துவது தொடர்பாக ஆராய மத்திய அரசு நிபுணர் குழு ஒன்றை உருவாக்கியது. கடந்த ஜூன் மாதம் 1-ம் தேதி தொடங்கப்பட்ட இந்த நிபுணர் குழுவில் ஹைதராபாத் ஐ.ஐ.டி. பேராசிரியர் வித்யாசாகர் தலைமையில் 10 பேர் கொண்ட உறுப்பினர்கள் இடம்பெற்றனர்.

இந்நிலையில் அவர்கள் தற்போது மத்திய அரசுக்கு அளித்துள்ள அறிக்கையில், இப்போது அமலில் இருக்கும் பாதுகாப்பு நெறிமுறைகளை தொடர்ந்து நீட்டித்தால் அடுத்தாண்டு (2021) பிப்ரவரி மாதத்துக்குள் இந்தியாவில் கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வந்துவிடலாம் எனத் தெரிவித்துள்ளனர்.
இதுமட்டுமல்லாமல் மேலும் அந்த குழு அளித்துள்ள அறிக்கையில், நாடு முழுவதும் 30% மக்கள் ஆண்டிபாடிகளை பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இனி அடுத்தடுத்து இந்தியாவில் பண்டிகை காலம் தொடங்குவதாலும், குளிர்காலம் வரவிருப்பதாலும் கொரோனா பாதிப்பு சற்று அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிதாக ஊரடங்கோ, பொதுமுடக்கமோ தேவையில்லை என்றும் சரியான முறையில் பாதுகாப்பு நெறிமுறைகளை பின்பற்றினாலே கொரோனாவில் இருந்து தற்காத்துக்கொள்ள முடியும் எனக் கூறப்பட்டுள்ளது. தற்போது அமலில் இருக்கும் பாதுகாப்பு நெறிமுறைகளை எக்காரணத்தை கொண்டும் விட்டுவிடக்கூடாது என்றும் தொடரவேண்டும் எனவும் நிபுணர் குழு அறிவுறுத்தியுள்ளது.
கொரோனா கட்டுப்படுத்துதல் விவகாரத்தில் மற்ற நாடுகளை ஒப்பிடும் போது இந்தியா சிறப்பாக செயல்பட்டதாக நிபுணர் குழு தெரிவித்துள்ளது. மேலும், சரியான நேரத்தில் இந்தியாவில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் பாதிப்பு எண்ணிக்கையை கணிசமாக குறைக்க முடிந்ததாக அந்தக் குழு பாராட்டு தெரிவித்துள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications