குவைத் விரைகிறார் வெளியுறவு இணை அமைச்சர் கே.வி.சிங்! இந்தியர்கள் உடல்களை விரைந்து கொண்டு வர தீவிரம்!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: அவசரமாக குவைத் விரைகிறார் இந்திய வெளியுறவு இணை அமைச்சர் கீர்த்தி வர்தன் சிங். உலகை உலுக்கியுள்ள குவைத் தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்களை விரைந்து இந்தியா கொண்டுவர மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

குவைத்தின் மங்காப் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் 53 பேர் உயிரிழந்துள்ளனர். குவைத்தின் தெற்கு மங்காஃப் மாவட்டத்தில் உள்ள கட்டிடத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் உடல் கருகியும், மூச்சுத்திணறியும் 53 பேர் பலியாகி உள்ளனர். உயிரிழந்தவர்களின் பலர் இந்தியர்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது. மேலும், 43 பேர் காயமடைந்துள்ள நிலையில், இவர்களில் 30 பேர் இந்தியர்கள் என தகவல் கிடைத்துள்ளது.

kuwait fire accident

கோர தீ விபத்தில் 53 பேர் உயிரிழந்ததை குவைத் அரசு உறுதிப்படுத்தி உள்ளது. இதில் பெரும்பாலானோர் இந்தியர்கள் என இந்தியாவின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார்.

தீ விபத்து ஏற்பட்ட கட்டிடத்தில் கேரளா மற்றும் தமிழ்நாட்டைச் சேர்ந்த தொழிலாளர்கள் உட்பட சுமார் 195 தொழிலாளர்கள் இருந்ததாகக் கூறப்படுகிறது. தற்போதைய தகவல்படி உயிரிழந்தவர்களில் 40 பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் என்பது கண்டறியப்பட்டுள்ளது. குவைத்தில் உள்ள இந்திய தூதரகம் உதவி எண்ணை அறிவித்துள்ளது.

+965-65505246 என்ற எண்ணை, பாதிக்கப்பட்டவர்கள் குறித்து தெரிந்து கொள்ளவும், உதவிக்காகவும் மக்கள் அழைக்கலாம். தேவையான அனைத்து உதவிகளையும் செய்வோம் என குவைத்தில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.

தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்களை விரைந்து இந்தியா கொண்டு வரவும், காயமடைந்தவர்களுக்கு உடனடி சிகிச்சையை உறுதி செய்யவும் மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ள நிலையில், அதனை உறுதி செய்வதற்காக குவைத் செல்கிறார் வெளியுறவு இணை அமைச்சர் கே.வி.சிங்.

குவைத் தீ விபத்தில் பலியானவர்களின் குடும்பத்திற்கு பிரதமர் மோடி, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். மேலும், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையவும் வேண்டியுள்ளனர்.

இந்நிலையில், குவைத் தீ விபத்தில் 40க்கும் மேற்பட்ட இந்தியர்கள் உயிரிழந்ததை அடுத்து, குவைத் நாட்டுக்கு விரைகிறார் வெளியுறவுத்துறை இணை அமைச்சர் கீர்த்தி வர்தன் சிங். பிரதமர் மோடி உத்தரவின் பேரில் குவைத் விரைகிறார் வெளியுறவு இணை அமைச்சர் கே.வி.சிங்.

தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் உடலைகளை விரைந்து இந்தியா கொண்டு வரவும், காயமடைந்தவர்களுக்கு உடனடி சிகிச்சையை உறுதி செய்யவும் மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ள நிலையில், அதனை உறுதி செய்வதற்காக குவைத் செல்கிறார் வெளியுறவு இணை அமைச்சர் கே.வி.சிங்.

பிரதமர் நரேந்திர மோடியின் வழிகாட்டுதலின்படி, தீ விபத்தில் காயமடைந்தவர்களுக்கு உதவுவதை மேற்பார்வையிடவும், இந்த துரதிர்ஷ்டவசமான சம்பவத்தில் இறந்தவர்களின் சடலங்களை விரைவாக இந்தியா அனுப்புவதற்கு உள்ளூர் அதிகாரிகளுடன் ஒருங்கிணைக்கவும் வெளியுறவுத்துறை இணை அமைச்சர் கே.வி.சிங் அவசரமாக குவைத் செல்கிறார் என வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+