போலி செய்திகள்.. நிலையற்ற தன்மையை ஏற்படுத்த.. மிகப் பெரிய சதி.. தேர்தல் நாளில் பகீர் கிளப்பும் மோடி
டெல்லி: நாட்டில் அரசியலில் நிலையற்ற தன்மையை ஏற்படுத்த மிகப் பெரியளவில் சதித்திட்டம் நடப்பதாகவும் பாஜக அரசு குறித்துப் பல போலி தகவல்கள் பரப்பப்படுவதாகவும் பிரதமர் மோடி பரபரப்பு குற்றச்சட்டை முன் வைத்துள்ளார்.
பாரதிய ஜனதா கட்சி தொடங்கப்பட்டு இன்றுடன் 41 ஆண்டுகள் நிறைவடைகிறது. வாஜ்பாய், அத்வானி உள்ளிட்ட தலைவர்கள் கடந்த 1980ஆம் ஆண்டு ஏப்ரல் 6ஆம் தேதி பாஜகவை தொடங்கினர்.
பாஜக தொடங்கப்பட்டு 41 ஆண்டுகள் நிறைவடைந்த விழாவில் பிரதமர் மோடி கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், அரசியலில் நிலையற்ற தன்மையை ஏற்படுத்த மிகப் பெரியளவில் சதித்திட்டம் நடப்பதாகக் குற்றஞ்சாட்டினார்.

தொடர் பொய்கள்
அப்போது பேசிய பிரதமர் மோடி, நாட்டு மக்களிடையே தொடர்ந்து தவறான மற்றும் போலியான செய்திகள் பரப்பப்படுகிறது. விவசாயிகளிடம் தங்கள் நிலம் கைப்பற்றப்படும். சிலரது குடியுரிமை பறிக்கப்படும். இட ஒதுக்கீடு ரத்து செய்யப்படும் என்று பொய்யான தகவல்கள் மக்களிடையே பரப்பப்படுகிறது. அவ்வளவு ஏன் இந்திய அரசியலமைப்பே மாற்றப்படும் என்றும் சிலர் பொய்யான தகவல்களைத் திட்டமிட்டுப் பரப்பி வருகின்றனர்.

மிகப் பெரிய சதி
இதற்குப் பின்னால் முழுக்க முழுக்க அரசியல் தான் உள்ளது. நாட்டில் அரசியல் நிலையற்ற தன்மையை உருவாக்க வேண்டும் என்பதற்காக மிகப் பெரியளவில் சதி நடைபெறுகிறது. தவறான தகவல்களைப் பரப்பி மக்களிடையே அச்சத்தை உருவாக்க அவர்கள் முயன்று வருகின்றனர். இதை முறியடிப்பது பாஜக தொண்டர்களுக்கு மிகப் பெரிய சவாலாக உள்ளது. பாஜகவினர் கவனமாக இருந்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

வெல்வது மட்டும் குறி இல்லை
பாஜக தேர்தலில் வெல்வதை மட்டுமே குறிவைத்துச் செயல்படுவதாக எழுந்துள்ள விமர்சனத்திற்கும் பிரதமர் மோடி பதிலடி கொடுத்தார். எதிர்க்கட்சிகள் தாங்கள் தேர்தலில் வெல்லும் இதுபோல எதையும் கூறுவதில்லை என்றும் அவர்கள் இரட்டை நிலைப்பாட்டை எடுப்பதாகவும் கூறினார். இப்படி சொல்பவர்கள் ஜனநாயகத்தின் முதிர்ச்சியைப் புரிந்து கொள்ளவில்லை என்றும் மக்களின் எதிர்பார்ப்புகளையும் கனவுகளையும் அவர்கள் மதிப்பதில்லை என்றும் அவர் கூறினார்.

பாஜக ஏழைகளுக்கான அரசு
தொடர்ந்து பேசிய அவர், பாஜக அரசு என்றும் தேசத்திற்கு முதலிடம் கொடுக்கும் ஒரு அரசு. பாஜக அரசு அனைத்து இந்தியர்களுக்குமான ஒரு அரசு. பாஜக அரசு தூய்மையான நோக்கத்துடன் இயங்கும் ஒரு அரசு. சிறந்த கொள்கை மற்றும் தேவையான சீர்திருத்தங்களை மேற்கொள்ளும் அரசு என்றும் அவர் குறிப்பிட்டார். மேலும், பாஜகவின் சாதனைகளைப் பட்டியலிட்ட அவர், கிராமப்புற மற்றும் ஏழை மக்கள் இதன் மூலம் பயனடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
-
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை?












Click it and Unblock the Notifications