"இயல்பான பேச்சுவார்த்தைக்கு முயற்சி" அமைச்சர் கடிதத்தை படித்து பாருங்கள்- தமிழில் மோடி ட்வீட்
டெல்லி: வேளாண் சட்டம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி தமிழில் ட்வீட் செய்துள்ளார். இயல்பான பேச்சுவார்த்தைக்கு முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று அவர் கூறியுள்ளார்.

இதுபற்றிய அவரது டுவிட்டர் பதிவு: வேளாண் துறை அமைச்சர் நரேந்திர தாமர், தனது உணர்வுகளை வேளாண் சகோதர சகோதரிகளுக்கு எழுதியுள்ள கடிதத்தில் வெளிப்படுத்தியுள்ளார். இயல்பான பேச்சுவார்த்தைக்கு முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. உழவர் பெருமக்கள் அதைப் படிக்க வேண்டுகிறேன். இந்தத் தகவலை பெருமளவில் பகிர வேண்டும் என பொதுமக்களை கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு மோடி தனது டுவிட்டில் கூறியுள்ளார்.

மலையாளம், ஹிந்தி, கன்னடம், தெலுங்கு உட்பட மேலும் பல மொழிகளிலும் இதேபோல டுவிட் வெளியிட்டுள்ளார் மோடி. விவசாயிகள் போராட்டத்திற்கு நாடு முழுக்க ஆதரவு அதிகரித்து வரும் நிலையில், மோடி இவ்வாறு பெரும்பாலான மொழிகளில் ட்வீட் செய்துள்ளார். மேலும் விவசாயத் துறை அமைச்சர் தோமர் எழுதிய கடிதத்தின் தமிழாக்கத்தையும், மோடி தனது டுவிட்டர் பதிவில் இணைத்துள்ளார். ஒவ்வொரு மொழி டுவிட்டிலும் தோமரின் கடிதம் அந்தந்த மொழிக்கு ஏற்ப மாற்றப்பட்டு இணைக்கப்பட்டுள்ளது.
மினிமம் சப்போர்ட் விலையில் மாற்றம் இல்லை என்று ஏற்கனவே மோடி உறுதியளித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications