விவசாய போராட்டம் பற்றி தவறான செய்தி.. Zee Newsன் 3 வீடியோக்களை டெலிட் செய்ய என்பிடிஎஸ்ஏ உத்தரவு
டெல்லி: விவசாய போராட்டம் குறித்த தவறான செய்திகளையும், வன்முறையை தூண்டும் வகையிலும் செய்திகள் வெளியிட்டதாக கூறி ஜீ நியூஸ் சேனலின் மூன்று வீடியோக்களை டெலிட் செய்யும்படி செய்தி ஒளிபரப்பு மற்றும் டிஜிட்டல் தரநிர்ணய ஆணையம் (என்பிடிஎஸ்ஏ) உத்தரவிட்டுள்ளது. என்பிடிஎஸ்ஏ விதிமுறைகளை ஜீ நியூஸ் மீறி விட்டதாக இந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
விவசாய போராட்டத்தின் போது கடந்த ஜனவரி 19, 20, 26 ஆகிய தேதிகளில் ஜீ நியூஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பட்ட செய்திகளுக்கு எதிராக என்பிடிஎஸ்ஏவில் இந்த புகார் அளிக்கப்பட்டது. டெல்லியை சேர்ந்த சமூக செயல்பாட்டாளர் இந்திரஜித் கோர்படே இந்த புகாரை அளித்து இருந்தார்.
இந்த புகார் தொடர்பாகவே தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இரண்டு புகார்கள்
சமூக செயல்பாட்டாளர் இந்திரஜித் கோர்படே அளித்த முதல் புகாரில், ஜனவரி 25ம் தேதி ஒளிபரப்பப்பட்ட செய்தியில் விவசாயிகளை காலிஸ்தானி என்று குறிப்பிட்டதாகவும். சிங்கு எல்லை பகுதியை ஜீ செய்தியாளர் காலிஸ்தானிகளின் கூடாரம் என்று குறிப்பிட்டதாகவும். அவர்கள் இந்தியாவிற்கு எதிராக போர் தொடுத்துள்ளார் என்று குறிப்பிட்டதாகவும் புகாரில் தெரிவித்து இருந்தார். இந்த செய்தி கலவரத்தை, வெறுப்பை பரப்பும் வகையில் இருந்ததாக அவர் செய்தியில் குறிப்பிட்டு இருந்தார்.

ஆதாரம்
இதற்கான வீடியோ ஆதாரங்கள், சமூக வலைத்தளத்தில் ஷேர் செய்யப்பட்ட ஜீ செய்தி லிங்குகள் ஆகியவற்றை அவர் பகிர்ந்து இருந்தார். இரண்டாவது புகாரில் ஜனவரி 29ம் தேதி ஒளிபரப்பான காட்சிகளில் ஜீ நியுசில் விவசாயிகள் செங்கோட்டையில் இருந்து தேசிய கொடியை அகற்றியதாக காட்சிகளில் ஒளிபரப்பப்பட்டதாக புகாரில் கூறப்பட்டுள்ளது. ஆனால் உண்மையில் விவசாயிகள் தேசிய கொடியை அகற்றவில்லை. இதில் ஜீ நியூஸ் பொய்யான செய்தியை பரப்பி உள்ளது என்று என்பிடிஎஸ்ஏயிடம் அவர் புகார் அளித்து இருந்தார்.

விளக்கம்
இந்த நிலையில் முதல் புகாரை ஜீ நியூஸ் மறுத்தது. நாங்கள் விவசாயிகளை மதிக்கிறோம். அவர்கள்தான் நமக்கு உணவு அளிக்கிறார்கள். அவர்களை நாங்கள் தவறாக பேசவில்லை என்று ஜீ நியூஸ் விளக்கம் அளித்தது. இரண்டாவது புகார் தொடர்பாக விளக்கமளித்த ஜீ நியூஸ், செய்தியாளர் லைவ் செய்தியில் தேசிய கொடி அகற்றப்பட்டதாக தவறுதலாக கூறினார். இது தவறுதானே ஒழியே, தெரிந்து செய்யப்படவில்லை என்று குறிப்பிட்டு இருந்தது.

நடவடிக்கை
இந்த நிலையில் இந்த இரண்டு புகார்களையும் என்பிடிஎஸ்ஏ விசாரணையை செய்தது. வீடியோ ஆதாரங்களை சோதனை செய்தது. முடிவில் ஜீ நியூஸ் Broadcasting Standards and Specific Guideline Covering Reportage, Fundamental Standards விதி எண் 1 மற்றும் 2 ஐ மீறிவிட்டதாக உத்தரவிட்டது. அதோடு இனி இதுபோன்ற தவறுகளை செய்ய கூடாது. அவர்கள் விதி மீறி உறுதியாக தெரிகிறது.

டெலிட்
செய்தி ஊடகங்கள் பொறுப்பாக செயல்பட வேண்டும் என்று என்பிடிஎஸ்ஏ உத்தரவிட்டது. மேலும் விவசாய போராட்டம் குறித்த தவறான செய்திகளையும், வன்முறையை தூண்டும் வகையிலும் செய்திகள் வெளியிட்டதாக கூறி ஜீ நியூஸ் சேனலின் மூன்று வீடியோக்களை டெலிட் செய்யும்படி செய்தி ஒளிபரப்பு மற்றும் டிஜிட்டல் தரநிர்ணய ஆணையம் (என்பிடிஎஸ்ஏ) உத்தரவிட்டுள்ளது.
-
அசைக்க முடியாத சாதனையைச் செய்த மோடி! 8,931 நாள் அரசு பதவி! உலக அளவில் உயரும் டிஜிட்டல் செல்வாக்கு! -
“போர் நடந்தாலும்.. எரிபொருள் கொள்முதலில் பாதிப்பு இருக்காது”.. நாடாளுமன்றத்தில் மோடி உறுதி! -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம்












Click it and Unblock the Notifications