கொரோனாவிலிருந்து மீண்டு வந்த கேரளா மாணவர்?.. இறுதி மருத்துவ அறிக்கைக்காக காத்திருக்கும் அதிகாரிகள்
Recommended Video
டெல்லி: சீனாவிலிருந்து கேரளா மாநிலம் திருச்சூர் வந்த மாணவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பிருந்த நிலையில் அவர் தற்போது குணமடைந்ததாக சொல்லப்படுகிறது.
கொரோனா வைரஸ் சீனாவில் வேகமாக பரவி 900-க்கும் மேற்பட்ட உயிரிழப்புகளை ஏற்படுத்தியுள்ளது. மேலும் ஆயிரக்கணக்கான மக்கள் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நோய் சார்ஸை விட மோசமாக பரவி உயிர் இழப்புகளை ஏற்படுத்துகிறது.
40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் இந்தியா உள்பட 25 நாடுகள் கொரோனா வைரஸை இறக்குமதி செய்து கொண்டுள்ளனர். அதாவது நோய் தொற்றால் இந்த நாடுகளை சேர்ந்தோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா வைரஸ்
இந்தியாவில் முதலில் கேரளா மாநிலம் திருச்சூரை சேர்ந்த மாணவருக்கு கொரோனா அறிகுறிகள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரது ரத்த மாதிரி எடுக்கப்பட்டு புனேவுக்கு அனுப்பப்பட்டது. இதில் அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது ஜனவரி 30-ஆம் தேதி உறுதி செய்யப்பட்டது. அது போல் கேரளாவை சேர்ந்த மற்றொரு மாணவருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

நெகட்டிவ்
இந்தியாவில் இதுவரை 3 பேருக்கு இந்த வைரஸ் இருப்பது தெரியவந்தது. இந்த நிலையில் முதலில் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்ட கேரளா மாணவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் அவர் குணமடைந்ததாக கூறப்படுகிறது. ஜனவரி 30-ஆம் தேதி பாசிட்டிவ் என காட்டிய அவரது ரத்த மாதிரிகள் தற்போது எடுத்த சோதனைகளில் நெகட்டிவ் காட்டியுள்ளதாக கூறுகின்றனர். எனினும் உறுதியான தகவல்கள் வரவில்லை.

முற்றிலும் குணமடைந்த நோய்
எனினும் அவரது ரத்த மாதிரிகள் புனேவுக்கு அனுப்பியுள்ளனர். அந்த முடிவுகளுக்காக கேரளா மாநில சுகாதாரத் துறை அதிகாரிகள் காத்திருக்கின்றனர். கொரோனா வைரஸ் பாதிப்புக்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை என கூறப்படுகிறது. அப்படியிருக்கையில் கேரள மாணவருக்கு இந்த நோய் பாதிப்பு முற்றிலும் குணமடைந்தது எப்படி என தெரியவில்லை.

மருத்துவர்கள்
ஒரு வேளை அந்த நோயாளியின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க இயற்கையான உணவுகள் கொடுக்கப்பட்டதா என தெரியவில்லை. கொரோனா வைரஸ் இரு நிலைகளை கொண்டது என கூறப்படுகிறது. அதில் முதல் நிலை என்றால் மற்ற வைரஸ் நோய்களுக்கு சிகிச்சை அளிப்பது போல் கொடுத்து நோயாளியை காப்பாற்ற முடியும். ஆனால் இரண்டாம் நிலை வந்துவிட்டால் உயிரிழப்பு நிச்சயம் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.












Click it and Unblock the Notifications