ரூ.2 ஆயிரம் நோட்டுகளை செல்லாததாக அறிவிக்கலாம்.. முன்னாள் பொருளாதார விவகாரத்துறை செயலாளர் யோசனை
டெல்லி: பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் மூன்றாம் ஆண்டு நினைவு நாளான இன்று, முன்னாள் பொருளாதார விவகார செயலாளர் எஸ் சி கார்க், பழைய 500 மற்றும் 1,000 நோட்டுகளுக்கு பதிலாக மோடி அரசு கொண்டு வந்த ரூ .2,000 நோட்டு பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாகவும் அதை செல்லாததாக அறிவிக்கலாம் என்றும் கூறினார்.
மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, இந்த நாளில் (நவ.8) தான், பிரதமர் நரேந்திர மோடி, கறுப்புப் பணத்தை கட்டுப்படுத்துவதற்கும், டிஜிட்டல் பரிவர்த்தனைகளை ஊக்குவிப்பதற்கும் பழைய 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளை செல்லாது என அறிவித்தார்.
அதன்பிறகு புதிதாக 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் மற்றும் புதிய 500 ரூபாய் நோட்டுகள் அறிமுகம் செய்யப்பட்டது. இந்நிலையில் இன்றுடன் பணமதிப்பிழப்பு நடவடிக்கை எடுத்து மூன்று ஆண்டுகள் ஆகிறது

செல்லாது
இந்த நிலையில் 2ஆயிரம் நோட்டுகளை செல்லாததாக அறிவிக்கலாம் என முன்னாள் பொருளாதார விவகாரத்துறை செயலாளர் எஸ்.சி.கார்க் ஆலோசனை வழங்கி உள்ளார்.

டிஜிட்டல் பரிவர்த்தனை
நாட்டின் பொருளாதார விவகாரத்துறை செயலாளராக பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்றவர் எஸ்.சி.கார்க். இவர் இன்று டெல்லியில் செய்தியாளர்களுக்கு அளித்துள்ள பேட்டியில், நம் நாட்டில் ரொக்க பண பரிவர்த்தனைகளே அதிகமாக உள்ளது. உலகம் முழுவதும் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் வேகமாக வளர்ந்து வரும் நிலையில், இந்தியாவில் மட்டும் இந்த வேகம் மிககுறைவாக இருக்கிறது. அதற்கு ஆதராமாக பதுக்கி வைக்கப்பட்டுள்ள 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை கூறலாம்.

பரிவர்த்தணையில் இல்லை
2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் இப்போது புழக்கத்தில் இல்லை. காரணம் சிலர் அதை பதுக்கியுள்ளார்கள். நாட்டின் பெரும்பாலான பரிவர்த்தனைகளுக்கு 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் பயன்படுத்துவது இல்லை.

வங்கியில் டெபாசிட்
எனவே 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை பண மதிப்பிழப்பு செய்துவிடலாம். இதற்கு எளிய வழி என்றால் வங்கியில் நோட்டுகளை டெபாசிட் செய்யக் கூறினாலே போதும். வேறு ஏதும் செய்யத் தேவையில்லை. மக்களை சிரமப்படுத்தவும் தேவையில்லை. என் கணக்கின்படி, புழக்கத்தில் உள்ள ரூபாய் நோட்டுகளில் மூன்றில் ஒருபங்கு 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளாக உள்ளது" என்றார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications