ரயில் பயணிகளுக்கு குட்நியூஸ்.. ரயில்வே நிர்வாகம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

டெல்லி: கோடைக்காலம் தொடங்கிவிட்ட நிலையில், ஏசி பெட்டிகளில் பயணிக்க விரும்பும் ரயில் பயணிகளுக்கு 'எகனாமி' வகுப்பு மீண்டும் அமல்படுத்தப்படுகிறது. அந்த வகுப்பில், 8 சதவீதம் வரை குறைவான கட்டணம் வசூலிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2021-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் ரயில்களில் 3 அடுக்கு ஏ.சி. பெட்டிகளில் 'எகனாமி' வகுப்பு அறிமுகம் செய்யப்பட்டது. அந்த வகுப்புக்கான பயண கட்டணம், வழக்கமான 3 அடுக்கு ஏ.சி. பயண டிக்கெட் கட்டணத்தை விட 6 முதல் 8 சதவீதம் வரை குறைவாக இருக்கும் என்று ரயில்வே நிர்வாகம் கூறியிருந்தது.

சிறப்பான, மலிவான ஏ.சி. ரயில் பயணத்தை அளிப்பதற்காக இந்த வகுப்பு அறிமுகப்படுத்தப்பட்டது. வழக்கமான 3 அடுக்கு ஏ.சி. பெட்டிகளில் 72 படுக்கைகளும், 'எகனாமி' வகுப்பில் 80 படுக்கைகளும் இருந்தன. அதாவது 'எகனாமி' வகுப்பு பயணிகளுக்கு போர்வை மட்டும் வழங்கப்படாது. மற்றபடி எல்லாம் ஒன்று தான். அதேநேரம் 3 அடுக்கு வகுப்பு கட்டணத்தை ஒப்பிடும் போது ஏசி எகனாமிக்கு கொஞ்சம் குறைவு ஆகும்.

பயணிகள்

பயணிகள்

ரயில்வேக்கு எகனாமி வகுப்பு அறிமுகம் மூலம் ஒரே ஆண்டில் ரூ.231 கோடி வருவாய் கிடைத்தது. கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் ஆகஸ்ட் மாதம் வரை 15 லட்சம் பயணிகள் அந்த வகுப்பில் பயணம் செய்தனர். அதன்மூலம் மட்டும் ரூ.177 கோடி வருவாய் கிடைத்ததாக ரயில்வே தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

கட்டணம்

கட்டணம்

இதற்கிடையே, கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 'எகனாமி' வகுப்பு, வழக்கமான 3 அடுக்கு ஏ.சி. பெட்டிகளுடன் இணைக்கப்பட்டது. ஆனால் அந்த வகுப்பு பயணிகளுக்கும் போர்வை வழங்கப்படவிலை. அதேநேரம் போர்வைக்கான கட்டணமாக ரூ.60 முதல் ரூ.70 வரை பயணிகள் கூடுதலாக செலுத்த வேண்டி இருந்தது. இரு பிரிவினருக்கும் கட்டணம் சமமாகி விட்டது.

ரயில்வே அறிவிப்பு

ரயில்வே அறிவிப்பு

இந்தநிலையில், 3 அடுக்கு ஏ.சி. பெட்டிகளில் மீண்டும் 'எகனாமி' வகுப்பு அமல்படுத்தப்படுவதாக ரயில்வே நிர்வாகம் புதன்கிழமை அறிவித்தது. இதன்மூலம், கடந்த நவம்பர் மாதம் பிறப்பிக்கப்பட்ட உத்தரவு வாபஸ் பெறப்பட்டது. 2021-ம் ஆண்டு 'எகனாமி' வகுப்புக்கு நிர்ணயிக்கப்பட்ட கட்டணமே வசூலிக்கப்படும் என ரயில்வே கூறியுள்ளது. அதனால், வழக்கமான கட்டணத்தை விட 'எகனாமி' வகுப்பு பயணிகளுக்கு 6 முதல் 8 சதவீதம் வரை கட்டணம் குறைவாக இருக்கும். அதே சமயத்தில், அவர்களுக்கு போர்வை வழங்கப்படும் என்றும் ரயில்வே கூறியுள்ளது.

ஏசி பெட்டிகள்

ஏசி பெட்டிகள்

இந்த அறிவிப்பால், ஏற்கனவே ஆன்லைன் மூலமாகவும், டிக்கெட் கவுண்ட்டர் மூலமாகவும் முன்பதிவு செய்த 3 அடுக்கு ஏ.சி. பெட்டி பயணிகள், கூடுதல் கட்டணத்தை திரும்ப பெற்றுக் கொள்ளலாம் (ரீபண்ட்) என்று ரயில்வே அறிவித்துள்ளது. தற்போது, ரயில்களில் வழக்கமான 3 அடுக்கு ஏ.சி. பெட்டிகள் 11 ஆயிரத்து 277-ம், 'எகனாமி' வகுப்பு பெட்டிகள் 463-ம் இருக்கின்றன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+