ஐடி, பிபிஓ ஊழியர்கள்...டிசம்பர் 31 வரை வீட்டில் இருந்து செய்யலாம்...புது உத்தரவு!!
டெல்லி: கொரோனா தொற்று பரவல் காரணமாக வீடுகளில் இருந்து வேலை செய்ய ஐடி மற்றும் பிபிஓ நிறுவனங்களுக்கு ஜூலை 31ஆம் தேதி வரை மத்திய அரசு அனுமதி அளித்து இருந்தது. இந்த நிலையில் டிசம்பர் வரை வீட்டில் இருந்து வேலை செய்வதற்கான கால அவகாசத்தை நீடித்து மத்திய தகவல் தொடர்புத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
Recommended Video
கொரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில் உலக நாடுகளில் இருக்கும் ஐடி நிறுவனங்கள் பெரும்பாலும் வீடுகளில் இருந்து வேலை செய்யும் வாய்ப்பை அனைத்து ஊழியர்களுக்கும் வழங்கியுள்ளது. அவர்கள் தற்போது வீட்டில் இருந்தவாறு பணிபுரிந்து வருகின்றனர்.

பிபிஓ நிறுவனங்களில் பணிபுரிவர்கள் பொதுவாக அலுவலகங்களுக்கு சென்று பணிபுரிந்து வந்தனர். தற்போது இவர்கள் வீட்டில் இருந்து பணிபுரிந்து வருகின்றனர். இவர்களில் பலருக்கும் அவர்களது நிறுவனத்தின் சார்பில் கம்ப்யூட்டர் வழங்கப்படவில்லை. அவர்கள் தங்களது சொந்த கம்ப்யூட்டர்களை பயன்படுத்தி வருகின்றனர். அந்த கம்ப்யூட்டர்களுக்கும் நிறுவனம் மாதம் இவ்வளவு என்று ஒரு குறிப்பிட்ட வாடகையையும் கொடுத்து வருகிறது.
இந்த நிலையில்தான் வீட்டில் இருந்து வேலை செய்வதற்கான அனுமதியை ஐடி மற்றும் பிபிஓ ஊழியர்களுக்கு டிசம்பர் 31ஆம் தேதி வரை கால அவகாசத்தை நீட்டித்து மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அறிவித்துள்ளது. இதுகுறித்து நேற்று இரவு ட்விட்டரிலும் பதிவிட்டுள்ளது.
தற்போது ஐடி நிறுவனங்களில் வேலை செய்பவர்களில் 85 சதவீதம் பேர் தங்களது வீடுகளில் இருந்துதான் வேலை செய்கின்றனர். அலுவலகத்துக்கு சென்றேதான் ஆக வேண்டும் என்று இருப்பவர்கள் மட்டும் அலுவலகம் செல்கின்றனர். கடந்த ஏப்ரல் 30 ஆம் தேதி வரை வீட்டில் இருந்து வேலை செய்ய மத்திய தகவல் தொழில்நுட்பம் அனுமதித்து பின்னர் ஜூலை 31 ஆம் தேதி வரை அனுமதித்து இருந்தது. தற்போது மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் இதுவரைக்கும் 11.55 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. 28,084 பேர் உயிரிழந்து உள்ளனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications