ஹரியானாவில் மகனுக்கு துணை சிம் பதவி.. அப்பாவிற்கு பரோல்..சிறையிலிருந்து வெளியே வந்தார் அஜய் சவுதாலா
டெல்லி: ஜனநாயக் ஜனதா கட்சியின் தலைவர் துஷ்யந்த் சவுத்தாலாவின் அப்பா அஜய் சவுதாலா டெல்லி திகார் சிறையில் இருந்து பரோலில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
ஹரியானா சட்டசபை தேர்தலில் பாஜக 40 தொகுதிகளில் வெற்றி பெற்றது, காங்கிரஸ் 31 தொகுதிகளில் வெற்றி பெற்றது. ஆச்சர்யமாக ஜனநாயக் ஜனதா கட்சி 10 இடங்களில் வென்றது. அதேபோல் சுயேட்சைகள் 7 இடங்களில் வென்றனர். ஹரியானாவில் ஆட்சி அமைக்க 46 இடங்களில் வெல்ல வேண்டும்.
இதையடுத்து தொங்குசட்டசபை உருவாகி உள்ளது. ஜனநாயக் ஜனதா கட்சி மற்றும் சுயேட்சைகள் ஆகியோர் தற்போது ஹரியானாவில் ஆட்சியை தீர்மானிக்கும் சக்தியாக மாறினார்கள்.

என்ன ஆட்சி
இந்த நிலையில் ஜனநாயக் ஜனதா கட்சியின் தலைவர் துஷ்யந்த் சவுத்தாலா, பாஜகவிற்கு ஆதரவு அளிப்பதாக அறிவித்தார். தன்னுடைய கட்சியின் 10 எம்எல்ஏக்கள் பாஜகவிற்கு ஆதரவு அளிப்பார்கள் என்று கூறினார். இதனால் பாஜக கட்சி மீண்டும் ஹரியானாவில் ஆட்சி அமைக்க உள்ளது.

துணை முதல்வர்
இந்த நிலையில் ஜனநாயக் ஜனதா கட்சியின் தலைவர் துஷ்யந்த் சவுத்தாலாவிற்கு பாஜக துணை முதல்வர் பொறுப்பை அளித்துள்ளது. ஜேஜேபி கட்சியின் கோரிக்கையை அமித் ஷா உடனே ஏற்றுக்கொண்டார். முக்கிய அமைச்சர் பதவியும், துணை முதல்வர் பதவியும் ஜேஜேபி கட்சிக்கு வழங்கப்பட்டு உள்ளது.

பரோலில் விடுதலை
இந்த நிலையில் ஜனநாயக் ஜனதா கட்சியின் தலைவர் துஷ்யந்த் சவுத்தாலாவின் அப்பா அஜய் சவுதாலா டெல்லி திகார் சிறையில் இருந்து பரோலில் விடுவிக்கப்பட்டுள்ளார். 2013ம் ஆண்டு டெல்லி ஹைகோர்ட் மூலம் அஜய் சவுதாலா மற்றும் அவரின் அப்பா ஓம் பிரகாஷ் சவுதாலா இரண்டு பேரும் சிறைக்கு அனுப்பப்பட்டனர்.

ஏன்
3000 பள்ளி ஆசிரியார்களை நியமித்ததில் அஜய் சவுதாலாமுறைகேடு செய்ததாகவும், இதில் லஞ்சம், சாதி பாகுபாடு உள்ளிட்ட தவறுகள் நடந்ததாகவும் குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. இந்த நிலையில் 4 வருடமாக டெல்லி திகார் சிறையில் இருந்த அஜய் சவுதாலாவிற்கு இன்று பரோல் வழங்கப்பட்டுள்ளது.

பேட்டி
14 நாள் பரோலில் வந்திருக்கும் அஜய் சவுதாலா தன்னுடைய மகன் குறித்து பேட்டியளித்துள்ளார். அதில் , கட்சியை 11 மாதங்களில் என் மகன் பெரிய அளவில் வளர்த்து இருக்கிறான். எனக்கு மிகவும் பெருமையாக இருக்கிறது. அவன் பாஜக கட்சியுடன் கூட்டணி வைத்தது நல்ல முடிவு, என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications