இந்தியாவின் தற்போதைய நிலை அச்சமூட்டுகிறது.. உடனடியாக நாம் உதவ வேண்டும்.. கிரேட்டா தன்பெர்க் ட்வீட்
டெல்லி: இந்தியாவில் தற்போது ஏற்பட்டுள்ள நிலை அச்சமூட்டும் வகையில் உள்ளதாகவும் சர்வதேச சமூகம் உடனடியாக இந்தியாவுக்குத் தேவையான உதவிகளைச் செய்ய வேண்டும் என இளம் பருவநிலை ஆர்வலர் கிரேட்டா தன்பெர்க் ட்வீட் செய்துள்ளார்.
இந்தியாவில் கொரோனா பாதிப்பின் தாக்கம் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. நாட்டில் தற்போது தினசரி வைரஸ் பாதிப்பு 3.46 லட்சமாக அதிகரித்துள்ளது. அதேபோல உயிரிழப்புகளும் 2,624ஆக உயர்ந்துள்ளது.

டெல்லி உள்ளிட்ட நாட்டின் பல்வேறு மாநிலங்களிலும் ஆக்சிஜன் சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பல்வேறு மருத்துவமனைகளிலும் சில மணி நேரத்திற்குத் தேவையான ஆக்சிஜன் மட்டுமே உள்ளது. ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக டெல்லியில் உள்ள ஒரு மருத்துவமனையில் 25 பேர் உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது.

இது குறித்து சுவீடன் நாட்டைச் சேர்ந்த இளம் பருவநிலை ஆர்வலர் கிரேட்டா தன்பெர்க் தனது ட்விட்டரில், "இந்தியாவில் தற்போது ஏற்பட்டுள்ள நிலை மிகவும் துயரத்தை ஏற்படுத்துகிறது. சர்வதேச சமூகம் உடனடியாக தேவையான உதவிகளை மேற்கொள்ள வேண்டும்" என ட்வீட் செய்துள்ளார்.
நாட்டிலேயே குறிப்பாக டெல்லியில் தான் ஆக்சிஜன் தட்டுப்பாடு அதிகமாக உள்ளது. கொரோனா நோயாளிகள் பல மணி நேரம் வரை காத்திருந்தே ஆக்சிஜன் உதவி பெரும் நிலை ஏற்பட்டுள்ளது. தலைநகரில் நிலைமை மிக மோசமாக உள்ளதால், தேவைக்கு அதிகமாக இருக்கும் ஆக்சிஜன் சிலிண்டர்களை அனைத்து மாநிலங்களும் கொடுத்து உதவ வேண்டும் என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ட்வீட் செய்திருந்தார்.
சர்வதேச அளவிலும் பிரிட்டன், பிரான்ஸ், ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவை இந்தியாவுக்கு உதவ தாயாராக உள்ளதாக அறிவித்துள்ளன.
-
காங். துரோகம்.. மனக்காயத்தில் தொண்டர்கள்! இந்திய கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! - திமுக -
தமிழகத்திற்கு வரும் 100 நாள் வேலை திட்ட நிதியில் 60% கட்.. 'VB-G RAM G' திட்டத்தில் மெகா அதிர்ச்சி -
இனி இந்தியாவை தொட முடியாது.. ரஷ்யா அனுப்பிய புதிய எஸ் 400 வான்வெளி பாதுகாப்பு சிஸ்டம்.. செம -
இந்தியா கூட்டணியில் இனி திமுக இல்லை? காங்கிரஸின் செயலால் பாஜகவிற்கு மிகப்பெரிய ஜாக்பாட் -
2029க்கு டார்கெட் செய்யும் விஜய்.. எப்படியாவது உள்ளே நுழைய வேண்டும்.. திமுக கொடுத்த கேப்.. ராகுல் முடிவு என்ன? -
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது!












Click it and Unblock the Notifications