இந்தியாவின் தற்போதைய நிலை அச்சமூட்டுகிறது.. உடனடியாக நாம் உதவ வேண்டும்.. கிரேட்டா தன்பெர்க் ட்வீட்
டெல்லி: இந்தியாவில் தற்போது ஏற்பட்டுள்ள நிலை அச்சமூட்டும் வகையில் உள்ளதாகவும் சர்வதேச சமூகம் உடனடியாக இந்தியாவுக்குத் தேவையான உதவிகளைச் செய்ய வேண்டும் என இளம் பருவநிலை ஆர்வலர் கிரேட்டா தன்பெர்க் ட்வீட் செய்துள்ளார்.
இந்தியாவில் கொரோனா பாதிப்பின் தாக்கம் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. நாட்டில் தற்போது தினசரி வைரஸ் பாதிப்பு 3.46 லட்சமாக அதிகரித்துள்ளது. அதேபோல உயிரிழப்புகளும் 2,624ஆக உயர்ந்துள்ளது.

டெல்லி உள்ளிட்ட நாட்டின் பல்வேறு மாநிலங்களிலும் ஆக்சிஜன் சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பல்வேறு மருத்துவமனைகளிலும் சில மணி நேரத்திற்குத் தேவையான ஆக்சிஜன் மட்டுமே உள்ளது. ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக டெல்லியில் உள்ள ஒரு மருத்துவமனையில் 25 பேர் உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது.

இது குறித்து சுவீடன் நாட்டைச் சேர்ந்த இளம் பருவநிலை ஆர்வலர் கிரேட்டா தன்பெர்க் தனது ட்விட்டரில், "இந்தியாவில் தற்போது ஏற்பட்டுள்ள நிலை மிகவும் துயரத்தை ஏற்படுத்துகிறது. சர்வதேச சமூகம் உடனடியாக தேவையான உதவிகளை மேற்கொள்ள வேண்டும்" என ட்வீட் செய்துள்ளார்.
நாட்டிலேயே குறிப்பாக டெல்லியில் தான் ஆக்சிஜன் தட்டுப்பாடு அதிகமாக உள்ளது. கொரோனா நோயாளிகள் பல மணி நேரம் வரை காத்திருந்தே ஆக்சிஜன் உதவி பெரும் நிலை ஏற்பட்டுள்ளது. தலைநகரில் நிலைமை மிக மோசமாக உள்ளதால், தேவைக்கு அதிகமாக இருக்கும் ஆக்சிஜன் சிலிண்டர்களை அனைத்து மாநிலங்களும் கொடுத்து உதவ வேண்டும் என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ட்வீட் செய்திருந்தார்.
சர்வதேச அளவிலும் பிரிட்டன், பிரான்ஸ், ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவை இந்தியாவுக்கு உதவ தாயாராக உள்ளதாக அறிவித்துள்ளன.
-
பெரிய சிக்கலில் இந்தியா! 1970ல் நடந்தது போல.. இப்போதும் நடக்கப்போகுது! வெளியான ஷாக் தகவல்! -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
ரெடியா இருங்க மக்களே! சட்டுன்னு ஏறப்போகும் பெட்ரோல், டீசல் விலை! தேதி குறிச்சாச்சு! -
தெறித்து ஓடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்! பாதாளத்திற்கே போகும் இந்திய பங்குச்சந்தைகள்.. 3 காரணங்கள் -
துரந்தர் இல்லை.. துரோகி.. இந்திய விமான படை வீரர் அதிரடி கைது! பாகிஸ்தானுக்காக உளவு பார்த்தது அம்பலம் -
ஈரானில் விழுந்த குண்டுகளால்.. இந்தியாவில் உயர்ந்த குடிநீர் விலை.. இன்னும் என்னவெல்லாம் நடக்குமோ! -
வந்தாச்சு LPG ATM.. இனி காத்திருக்கவே வேண்டாம்! வெறும் 2 நிமிடத்தில் புதிய சிலிண்டர் ஈஸியா வாங்கலாம் -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்?












Click it and Unblock the Notifications