தலைநகரில் விடிய விடிய கொட்டிய கனமழை.. ஸ்தம்பித்து போன டெல்லி! விமான சேவை கடும் பாதிப்பு!
டெல்லி: தலைநகர் டெல்லியில் நேற்று இரவு முதல் காலை வரை விடிய விடிய கனமழை கொட்டியது. இதனால் பல்வேறு இடங்களில் தண்ணீர் முட்டளவுக்கு தேங்கியது. கனமழை மற்றும் பலத்த காற்றின் காரணமாக பல்வேறு விமானங்கள் தரையிறங்குவதிலும் புறப்படுவதிலும் தாமதம் எற்பட்டது. 100-க்கும் மேற்பட்ட விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது. இன்று காலை 7.30 மணிக்கு பிறகு படிப்படியாக விமான சேவை சீராக தொடங்கியுள்ளது.
தலைநகர் டெல்லியில் நேற்று இரவு முதல் விடிய விடிய கனமழை கொட்டி தீர்த்தது. கனமழையால் டெல்லியில் பல்வேறு பகுதிகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடியது. பிரதான சாலைகளில் முட்டளவுக்கு மேல் தண்ணீர் ஓடியதால் வாகன ஓட்டிகள் தவித்தனர்.

டெல்லியில் உள்ள மோதி பாக், மிண்டோ சாலை, டெல்லி கண்டோன்மெண்ட் மற்றும் தீன் தயாள் உபத்யாய் மார்க் உள்ளிட்ட பகுதிகளில் சாலைகளில் மழை நீர் குளம் போல தேங்கியுள்ளது. இரவு 11.30 மணி முதல் அதிகாலை 5.30 மணி வரை பலத்த காற்றுடன் பெய்த மழையால் பல்வேறு இடங்களில் மரங்கள் சாய்ந்தன. டெல்லி சர்வதேச விமான நிலையத்தில் விமான போக்குவரத்து சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது.
பல்வேறு விமானங்கள் தரையிறங்குவதிலும் புறப்படுவதிலும் தாமதம் எற்பட்டது. 100-க்கும் மேற்பட்ட விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது. இன்று காலை 7.30 மணிக்கு பிறகு படிப்படியாக விமான சேவை சீராக தொடங்கியுள்ளது. தற்போது தலைநகர் டெல்லியில் வெப்ப நிலை 22 டிகிரி செல்சியஸ் ஆக உள்ளது.
டெல்லி மட்டும் இன்றி உத்தரகாண்ட் ஹரியானாவில் கனமழை பெய்தது. மோசமான வானிலை நிலவும் நிலையில், டெல்லி மற்றும் சுற்றுப்புற பகுதிகளுக்கு இந்திய வானிலை மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது.












Click it and Unblock the Notifications