மோடியின் திட்டங்களுக்கு இவ்வளவு செல்வாக்கா... கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியானது
டெல்லி: நியூஸ் 18, பர்ஸ்ட்போஸ்ட் இணைந்து நடத்திய (தி நேஷனல் டிரஸ்ட் சர்வே ) கருத்துக்கணிப்பில், தனிப்பட்ட மற்றும் நிதி நேர்மையில் நம்பகமானவர் யார் என்பதில் 53.8 சதவீதம் பேர் நரேந்திர மோடிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்திக்கு 25.5 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இதே போல், பல்வேறு கேள்விகளுக்கு கருத்துகணிப்பில் வெளியிடப்பட்டுள்ள தகவல்களை பின்வருமாறு வெளியிட்டுள்ளனர்.

ரபேல் ஊழல்
அதன்படி, மோடி மீதான காங்கிரசின் ரபேல் ஊழல் குற்றச்சாட்டு உண்மை என நம்புகிறீர்களா? என்ற கேள்விக்கு உறுதியாகத் தெரியவில்லை என 16 சதவீதமும், நிச்சயம் உண்மை இல்லை என 19 சதவீதமும், கொஞ்சம் உண்மையை என 22 சதவீதமும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜிஎஸ்டி வரி
பிரதமர் மோடியின் திட்டங்களுக்கான மதிப்பீடு? அதாவது ஜிஎஸ்டி வரி எப்படி என்று கேட்கப்பட்ட கேள்விக்கு 62.8 சதவீதம் ஏற்கிறோம் 30.5 சதவீதம் நிராகரிக்கிறோம் 6.8 சதவீதம் சொல்ல முடியாது என தெரிவித்துள்னர்.

பணமதிப்பிழப்பு
இதே போல், பணமதிப்பிழப்பை 66.7 சதவீதம் பேர் ஏற்பதாக தெரிவித்துள்ளனர். 28,7 சதவீதம் பேர் நிராகரித்துள்ளனர். 4.6 சதவீதம் சொல்ல முடியாது என கூறியுள்ளனர்.

தூய்மை இந்தியா
தூய்மை இந்தியா திட்டத்தை 74.2 சதவீதம் பேர் ஏற்றுள்ளனர். 21.1 சதவீதம் நிராகரித்துள்ளனர். 4,7 சதவீதம் சொல்ல முடியாது என கருத்து தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications