பெகாசஸ் ஒட்டு கேட்பு விவகாரம்- உச்சநீதிமன்ற நீதிபதி விசாரிக்க கோரி பத்திரிகையாளர் இந்து என். ராம் வழக்கு
டெல்லி: நாட்டையே அதிர்ச்சி அடைய வைத்துள்ள பெகாசஸ் ஸ்பைவேர் மூலமான ஒட்டு கேட்பு விவகாரம் தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் மூத்த பத்திரிகையாளர் இந்து என். ராம் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
இஸ்ரேலின் பெகாசஸ் உளவு மென்பொருள் மூலம் செல்போன்கள் ஒட்டு கேட்கப்பட்ட விவகாரம் உலக நாடுகளில் சர்ச்சையாகி இருக்கிறது. இந்தியாவில் மத்திய அமைச்சர்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள், பத்திரிகையாளர்கள் என பல நூறு பேரின் செல்போன்கள் ஒட்டுகேட்கப்பட்டதும் அம்பலமானது.
இதனால் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டிருக்கிறது. பெகாசஸ் ஒட்டு கேட்க உத்தரவிட்டது யார்? என்பது எதிர்க்கட்சிகளின் கேள்வி. பெகாசஸ் ஒட்டுகேட்பு விவகாரத்தில் தொடர்பும் இல்லை- விசாரணையும் இல்லை என்கிறது மத்திய அரசு.

உச்சநீதிமன்றத்தில் வழக்குகள்
இந்த விவகாரத்தால் நாடாளுமன்ற நடவடிக்கைகளும் பாதிக்கப்பட்டுள்ளன. உச்சநீதிமன்றத்திலும் ஏற்கனவே பெகாசஸ் ஒட்டு கேட்பு தொடர்பாக வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.

பத்திரிகையாளர்கள் வழக்கு
இந்த நிலையில் மூத்த பத்திரிகையாளர்களான இந்து என். ராம் மற்றும் சசிகுமார் ஆகியோர் இணைந்து உச்சநீதிமன்றத்தில் ஒரு மனுவைத் தாக்கல் செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அந்த மனுவில், பெகாசஸ் ஒட்டு கேட்பு தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிட வலியுறுத்தப்பட்டுள்ளது.
Recommended Video

மாஸ் உளவு பார்ப்பு
மேலும் பெகாசஸ் உளவு மென்பொருளானது பயங்கரவாத நடவடிக்கைகளை ஒடுக்குவதற்காக நாடுகளுக்கு வழங்க உருவாக்கப்பட்ட ஒரு மென்பொருள் என்கிறது இஸ்ரேல். ஆனால் இந்தியாவில் பத்திரிகையாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் என பல நூறு பேரை மொத்தமாக உளவு பார்க்க இந்த மென்பொருளை பயன்படுத்தி இருக்கின்றனர். இது ஜனநாயக அமைப்பை சீர்குலைப்பது. தனி மனித சுதந்திரத்தையும் கருத்து சுதந்திரத்தையும் பறிப்பதாகும்.

விசாரணை நடத்த கோரிக்கை
ஆகையால் உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் இந்த ஒட்டு கேட்பு விவகாரத்தை விசாரிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்த மனு மீது விரைவில் விசாரணை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
திருவள்ளூர் மக்கள் ஏக்கத்துடன் பார்த்த பல ஆண்டு கனவு... ரயில் நிலையத்தில் பார்த்துமே பெரு மகிழ்ச்சி -
தவெக அருண்ராஜ் படத்துடன்.. வாக்காளர்களுக்கு விநியோகம் செய்ய இருந்த சில்வர் பாத்திரங்கள் பறிமுதல்! -
என்னது துணை முதலமைச்சர் பதவி தராங்களா.. விஜய் தான் முதலமைச்சர்.. செங்கோட்டையன் தடாலடி -
அமெரிக்க கடற்படை உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்தது.. ஏன் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க முடியவில்லை? -
கொட்டிய ஆலங்கட்டி மழை.. கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் ஐஸ் மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி! -
"இது" இல்லை என்றால் சிலிண்டர் வராது! புக்கிங் விதிகளை திடீரென மாற்றிய மத்திய அரசு! முக்கிய அறிவிப்பு -
இப்போ வேண்டாம்.. தேர்தலுக்கு பின் ஆதரவு தருகிறேன்.. சிஎம் போஸ்ட் தாங்க.. பாஜகவிடம் பேசிய விஜய்? -
தங்க மழை கொட்ட போகுது.. PF வச்சு இருக்கீங்களா? சம்பள உச்சவரம்பு ₹25,000 ஆக உயருது? மாஸ் பிளான் -
வடிவேலுவை சினிமாவில் நுழைய விட்டதும், வளர்த்து விட்டதும் தப்பு.. ப்ளூ சட்டை மாறன் காட்டம்! பின்னணி சம்பவம் -
விஜய் ஏமாத்திட்டாரு.. பருத்தி மூட்டை குடோனிலேயே இருந்திருக்கலாம்.. திமுகவில் இணையும் செங்கோட்டையன்? -
Annamalai: 80 சீட்+ துணை முதல்வர் பதவி? பாஜக கூட்டணிக்கு விஜய் வருகிறாரா? அண்ணாமலை கொடுத்த விளக்கம் -
விஜய் வந்தால்! அதிமுக 134 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடும்? எடப்பாடி பழனிசாமியின் சீட் கணக்கு!












Click it and Unblock the Notifications