டெல்லி மருத்துமனையில் அமித்ஷா அதிரடி விசிட்- சிசிடிவி கேமராக்கள், கேண்டீன்களை அதிகரிக்க உத்தரவு
டெல்லி: கொரோனா மிக வேகமாக பரவி வரும் டெல்லியில் இன்று திடீரென லோக்நாயக் ஜெயபிரகாஷ் நாராயண் மருத்துவமனையில் (LNJP) உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆய்வு செய்தார். கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவமனைகளில் சிசிடிவி கேமராக்கள், கேண்டீன்களை அதிகரிக்கவும் அமித்ஷா உத்தரவிட்டார்.
டெல்லியில் மின்னல் வேகத்தில் கொரோனா பாதிப்பும் மரணங்களும் அதிகரித்து வருகின்றன. இதனையடுத்து டெல்லி மாநில அரசுடன் உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று ஆலோசனை நடத்தினார்.

அப்போது டெல்லியில் கொரோனாவை தடுக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதில் டெல்லி துணை நிலை ஆளுநர் அனில் பைஜால், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்த ஆலோசனையின் போது டெல்லியில் மருத்துவ படுக்கைகளின் தேவைகளை கருதி படுக்கைகளாக மாற்றப்பட்ட 500 ரயில் பெட்டிகளை மத்திய அரசு வழங்கும் என அறிவித்தார் அமித்ஷா. இதன் பின்னர் டெல்லியின் பல்வேறு தரப்பினருடன் அமித்ஷா ஆலோசனை நடத்தினார்.

இதனையடுத்து இன்று திடீரென திடீரென லோக்நாயக் ஜெயபிரகாஷ் நாராயண் மருத்துவமனைக்கு சென்று அமித்ஷா பார்வையிட்டார். பின்னர் மருத்துவர்களுடன் அவர் ஆலோசனை மேற்கொண்டார். அப்போது கொரோனா சிகிச்சை பெறும் நோயாளிகள் பகுதியில் கூடுதலாக சிசிடிவி கேமராக்களை அமைக்க வேண்டும் என்று அமித்ஷா உத்தரவிட்டார்.
அதேபோல் கொரோனா நோயாளிகளுக்கான உணவு வழங்குவதில் எந்தவித தடங்கலும் இல்லாத வகையில் கூடுதலான கேண்டீன்களை அமைக்கவும் அமித்ஷா உத்தரவிட்டிருந்தார்.
-
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications