ஓமிக்ரான் உடலுக்கு நல்லதா?.. தென்னாப்பிரிக்கா சயின்டிஸ்ட்கள் இப்படி சொல்றாங்களே!.. இது நடக்குமா?
டெல்லி: கொரோனா வைரஸ் எப்போதுதான் முடிவுக்கு வரும் என்பது இந்த உலக மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. ஆனால் இந்த வைரஸோ இரு ஆண்டுகளாக நம்மை ஆட்டி படைத்து வருகிறது.
Recommended Video
ஆல்பா, பீட்டா, டெல்டா, ஓமிக்ரான், டெல்மிக்ரான், டெல்டாகிரான் என பல்வேறு நவீனமயமான பெயர்களில் உருமாறி கொண்டே இருக்கிறது. தற்போது ஒவ்வொரு நாடுகளிலும் கொரோனா 3-ஆவது அலை, 4-ஆவது அலை ஏற்படுகிறது.
இந்தியா உள்ளிட்ட நாடுகளில் ஓமிக்ரான் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்த உருமாறிய வேரியண்ட் டெல்டாவை காட்டிலும் வேகமாக பரவக் கூடியது. அதே வேளையில் குறைந்த அளவிலான பாதிப்பையே கொடுத்து வருகிறது என்பதை கண்கூடாக பார்க்கிறேன். டெல்டாவை போன்ற தீவிர பாதிப்பையும் உயிரிழப்பையும் ஓமிக்ரான் ஏற்படுத்தவில்லை.

கொரோனா கட்டுப்பாடுகள்
இந்த நிலையில் பல நாடுகளில் ஊரடங்கு, கொரோனா கட்டுப்பாடுகள் என இருப்பதால் பொருளாதாரம் கடுமையாக பாதித்துள்ளது. எனவே இது எப்போது முடிவுக்கு வரும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. சில மருத்துவ நிபுணர்கள் இந்த கொரோனா வரும் மார்ச் 11 ஆம் தேதியுடன் முடிவுக்கு வருவதாக தெரிவித்துள்ளனர்.

ஓமிக்ரான் வேரியண்ட்
இந்த நிலையில் ஓமிக்ரான் வேரியண்ட் உருவான தென்னாப்பிரிக்காவில் உள்ள நிலவரத்தை சில விஞ்ஞானிகள் கருத்தில் கொள்கிறார்கள். அங்கு நடத்தப்பட்ட ஆய்வில் டெல்டா வேரியண்ட்டால் பாதிக்கப்பட்டவர்கள் ஓமிக்ரானால் பாதிக்கப்பட்டனர். ஆனால் தடுப்பூசி போட்டிருந்தால் ஓமிக்ரானால் பாதிக்கப்பட்டவர்கள் யாருக்கும் டெல்டாவால் பாதிப்பு ஏற்படவில்லை என ஆய்வுகள் கூறுகின்றன. இதை கடந்த நவம்பர், டிசம்பர் மாதங்களில் தென்னாப்பிரிக்காவில் ஓமிக்ரான் பாதித்த 23 பேரின் மாதிரிகள் மூலம் கண்டறிந்தனர்.

கொரோனா எப்போது முடியும்?
ஓமிக்ரான் வேரியண்ட் கோவிட் 19-க்கு எதிராக வலுவான நோய் எதிர்ப்பு சரக்தியை தருகிறது. அதிலும் ஒருவர் தடுப்பூசி போட்டிருந்தால் அவருக்கு சிறப்பான நோய் எதிர்ப்பாற்றலை தருகிறது. கொரோனா தொற்று நோயை ஓமிக்ரான் முடிவுக்கு கொண்டு வருவதாக இருக்கலாம் என்கிறார் விஞ்ஞானிகள். எனவே ஓமிக்ரான் கொரோனா தொற்றின் முடிவின் முன்னோடியாக இருக்கலாம். ஓமிக்ரான் வேகமாக பரவினாலும் டெல்டாவுடன் ஒப்பிடும் போது மிகக் குறைந்த அளவிலான பாதிப்புகளையே தருகிறது.

ஓமிக்ரான் செய்வது என்ன?
ஒரு தொற்று நோய் பல ஆண்டுகளாக செயல்பாட்டில் இருக்கும் போது மந்தை எதிர்ப்பு சக்தி மற்றும் குறைந்த பாதிப்பை ஏற்படுத்தும் வைரஸ் ஆகியவற்றால் தொற்றுநோயை முடிவுக்கு கொண்டு வரும் என விஞ்ஞானிகள் நம்புகிறார்கள். எப்படியோ கடந்த 2019ஆம் ஆண்டு முதல் மக்களை கடும் பாதிப்புக்குள்ளாக்கிய கொரோனா முடிவுக்கு வந்தால் சரிதான்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications