அதே டெய்லர்.. அதே வாடகை.. 2014ல் மோடி கொடுத்த வாக்குறுதியை 2019க்காக கையில் எடுத்த நிதின் கட்கரி!
2019 மார்ச் மாதத்திற்குள் கங்கை நதியை 80 சதவிகிதம் சுத்தம் செய்துவிடுவோம் என்று பாஜகவை சேர்ந்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார்.
டெல்லி: 2019 மார்ச் மாதத்திற்குள் கங்கை நதியை 80 சதவிகிதம் சுத்தம் செய்துவிடுவோம் என்று பாஜகவை சேர்ந்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார்.
2014 லோக் சபா தேர்தலில் பாஜக நிறைய முக்கியமான வாக்குறுதிகளை கொடுத்துவிட்டு தேர்தலில் வெற்றிபெற்றது. மோடி கொடுத்த முக்கியமான வாக்குறுதிகளில் கருப்பு பணத்தை மீட்பது, ராமர் கோவில் கட்டுவது மற்றும் கங்கையை சுத்தம் செய்வது முக்கிய பங்கு வகித்தது.
ஆனால் இந்த வாக்குறுதிகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை. முக்கியமாக கங்கை நதியை சுத்தம் செய்வதில் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

கண்டனம் தெரிவித்தனர்
இது பக்தர்களை, இந்து மத துறவிகளை பெரிய அளவில் ஏமாற்றத்திற்கு உள்ளாகியது. இதுவரை ஒரு சதவிகிதம் கூட கங்கை நதி சுத்தம் செய்யப்படவில்லை. மத்திய அரசின் இந்த செயலை பார்த்து தேசிய பசுமை தீர்ப்பாயம் கூட மத்திய அரசு கங்கை நதியை சுத்தம் செய்யாமல் இருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து இருந்தது.

கண்டிப்பாக முடியும்
இந்த நிலையில் தற்போது பாஜகவை சேர்ந்த சாலை போக்குவரத்துத்துறை மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் நிதின் கட்கரி, கங்கை நதியை விரைவில் சுத்தம் செய்வேன் என்று கூறியுள்ளனர். இதற்கான திட்ட பணிகள் விரைவில் தொடங்கும். ஆய்வுகள் தற்போது நடந்து வருகிறது என்று கூறியுள்ளார்.

மீதம் உள்ள பணிகள்
அடுத்த வருடம் மார்ச் மாதத்திற்குள் 80 சதவிகித பணிகளை முடித்துவிடுவோம் என்று கூறி இருக்கிறார். அதன்பின் 2020க்குள் மீதமுள்ள பணிகளை செய்வோம் என்றும் தெரிவித்துள்ளார். மார்ச் மாதத்தில் கங்கை நீர் குளிப்பதற்கு ஏற்ற நீராக மாறிவிடும் என்று கூறியுள்ளார்.

கையில் எடுத்துள்ளார்
2014 மோடி கொடுத்த வாக்குறுதியை தற்போது நிதின் கட்கரி மீண்டும் கையில் எடுத்து இருப்பது பெரிய கேள்விகளை எழுப்பி உள்ளது. ஏற்கனவே பாஜகவின் தேர்தல் வேட்பாளராக மோடிக்கு பதில் 2019ல் நிதின் கட்கரி நிறுத்தப்படுவாரா என்று விவாதம் எழுந்துள்ளது. இந்த நேரத்தில் நிதின், மோடியின் வாக்குறுதிக்கு உயிர் கொடுத்து இருப்பது பல கேள்விகளை எழுப்பி உள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications