பெயரை மாற்றினால் வீடு சொந்தமாகிவிடுமா? சீனா சொல்வதால் எதுவும் மாறாது.. ஜெய்சங்கர் கொடுத்த விளக்கம்
டெல்லி: உங்கள் வீட்டின் பெயரை நான் மற்றினால் வீடு என்னுடையது ஆகிவிடுமா?அருணாசல பிரதேசத்தில் உள்ள இடங்களுக்கு சீனா பெயரை மாற்றுவது உரிமை கொண்டாடுவது ஆகாது என்று வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறியுள்ளார்.
ஆசியாவில் சர்வ வல்லமை பொருந்திய நாடாக வலம் வர துடிக்கும் சீனாவின் கனவுக்கு முட்டுக்கட்டை போடும் நாடாக இந்தியாவே உள்ளது. இதனால், இந்தியா மீது கடும் எரிச்சலில் உள்ள சீனா, அவ்வப்போது எலையில் வாலாட்டி வருகிறது.

இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியான அருணாசல பிரதேசத்தை தங்களுக்கு சொந்தமானது என அடாவடி காட்டும் சீனா அவ்வப்போது அத்துமீறலிலும் ஈடுபட்டு வருகிறது. இதற்கு இந்தியாவும் தக்க பதிலடி கொடுக்க தவறுவது இல்லை. இந்த நிலையில், அருணாசல பிரதேசத்தின் 30 இடங்களுக்கு பெயரை மாற்றி சீனா அடாவடி காட்டியுள்ளது.
இது தொடர்பாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் இன்று விளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- அருணாசல பிரதேச எல்லைக் கட்டுப்பாடு அருகே ராணுவம் கண்காணிப்பில் உள்ளது. அருணாசல பிரதேசம் எப்போதும் இந்தியாவின் ஒரு அங்கம் தான். உங்கள் வீட்டின் பெயரை நான் மற்றினால் வீடு என்னுடையது ஆகிவிடுமா?
அருணாசல பிரதேசத்தில் உள்ள இடங்களுக்கு சீனா பெயரை மாற்றுவது உரிமை கொண்டாடுவது ஆகாது." என்றார். எப்போதும் இந்தியாவுடன் எல்லையில் அத்துமீறல் போக்கினை கையாண்டு வரும் சீனா, அத்துமீறல் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டிருக்கிறது. கல்வான் பகுதியில் ஏற்பட்ட மோதல் இந்தியா சீனா இடையே பிளவை ஏற்படுத்தியது.
இதேபோல் இந்தியாவுக்குச் சொந்தமான பல பகுதிகளைச் சீனா தனக்குச் சொந்தமானது என்கிறது. எந்த ஒரு ஆதாரமும் இல்லாமல் சீனா இந்தியாவின் சில பகுதிகளை தங்களுக்கு சொந்தம் என்று கூறி வருகிறது. அந்த வகையில் தான் தற்போது இந்தியா சீன எல்லையில் உள்ள அருணாசல பிரதேச மாநிலத்தின் 30 இடங்களுக்குச் சீன பெயர் மாற்றம் செய்துள்ளது.
இது குறித்த அறிவிப்பு சீன உள்விவகார துறை அமைச்சகத்தால் வெளியிடப்பட்டு இருப்பதாக அந்நாட்டின் சவுத் சீனா மார்னிங் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது. அருணாச்சலப் பிரதேசம் பகுதியில் உள்ள பல கிராமங்களுக்கு புதிய பெயர்கள் என்று சீனா ஒரு லிஸ்டை அறிவித்துள்ளது. இந்தியாவுக்குச் சொந்தமான அருணாச்சல பிரதேசத்தை தனக்குச் சொந்தம் எனச் சொல்லும் சீனா, அப்பகுதியை ஜாங்னன் என்று அழைக்கிறது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications