லாக்டவுன் இல்லாவிட்டால், ஏப். 15க்குள் 8.2 லட்சம் பேர் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பர்
டில்லி: லாக்வுன் அறிவிக்கப்படாமல் இருந்திருந்தால் இந்நேரம் இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு 8.2 லட்சமாக இருந்திருக்கும் என்ற அதிர்ச்சி ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
Recommended Video
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மத்திய சுகாதார துறை அமைச்சகத்தின் அறிவிப்பின் படி 7529 ஆக உள்ளது. இதில் 242 பேர் உயிரிழந்துள்ளனர். 652 பேர் குணம் அடைந்துள்ளனர். 6634 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். எனினும் இந்த எண்ணிக்கை மாநிலங்கள் அளித்த புள்ளி விவரங்களுடன் ஒப்பிடும் போது அதிகமாகவே இருக்கும். இந்தியாவில் கொரோனாவால் பாதித்தவர்களின் எண்ணிக்கை இன்றைய நிலபரப்படி 8400 ஐ தாண்டி இருக்கும் என்று சர்வதேச ஊடகங்கள் சொல்கின்றன.

இந்நிலையில் இந்தியாவில் லாக்டவுன் உத்தரவு பிறப்பிக்கப்பட்ட 25ம் தேதி நிலவரப்படி வெறும் 25 பேருக்கத்தான் கொரோனா வைரஸ் பாதிப்பு இருந்தது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக லாக்டவுன் உத்தரவு 21 நாட்களுக்கு பிறப்பிக்கப்பட்டதால் இந்த நோய் பரவும் வேகம் கடுமையாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக ஆய்வுகள் சொல்கின்றன.
ஊரடங்கு, மக்கள் வெளியில் செல்ல கட்டுப்பாடுகள் விதிக்கப்படாமல் இருந்திருந்தால் இந்நேரம் 8.2 லட்சம் பேர் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பார்கள் என்று வளர்ச்சி அடிப்படையிலான புள்ளி விவரங்கள் சொல்கின்றன. அதாவது தற்போதைய நிலையில் 41 சதவீதம் கொரோனா பாதிப்பு வளர்ச்சி அடைந்துள்ளது.
இதுபற்றி வெளிநாட்டு ஊடகங்களில் வெளியுறவுத்துறை அமைச்சகம் அளித்த ஐ.சி.எம்.ஆர் ஆய்வு குறித்த அறிக்கைகளை சுகாதார அமைச்சகம் வெள்ளிக்கிழமை மறுத்தது . எனினும் அரசின் தற்போதைய புள்ளி விவரங்களை ஆய்வு செய்தாலும் லாக்டவுன் தொடங்கப்படுவதற்கு முன்னர் காணப்பட்ட 28.9% நோயின் உச்ச வளர்ச்சி விகிதம் நீடித்திருந்தால், ஏப்ரல் 15 க்குள் மொத்தம் 1.2 லட்சம் பேரை பாதித்து இருக்கும்.












Click it and Unblock the Notifications