Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நீரவ் மோடி பாணி வங்கி மோசடிகளை தடுக்க நடவடிக்கை.. நிர்மலா சீதாரமன் அதிரடி அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    இனி 12 பொதுத்துறை வங்கிதான்: நிர்மலா சீதாராமன் அதிரடி | Nirmala Sitharaman Pressmeet

    டெல்லி: வங்கி மோசடியை தடுக்க புதிய திட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளதாக, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

    பொதுத் துறை வங்கி தலைவர்களுடன் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று ஆலோசனை நடத்தினார். பொதுத் துறை வங்கி தலைவர்களை சந்தித்த பிறகு நிர்மலா சீதாராமன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    Income tax return filing deadline not extended again, clarifies tax department

    இன்று நாங்கள் அறிவிக்கப் போகும் நடவடிக்கைகள் 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக இந்தியாவை மாறுவதற்கான எங்கள் குறிக்கோளுக்கு இணங்க இருக்கும். கடன் வளர்ச்சியை உறுதி செய்யும்.

    நிதித்துறைக்கு நாங்கள் மிகவும் வலுவான அடித்தளத்தை அமைத்துக் கொடுக்க முடிவு செய்துள்ளோம். கடந்த பல ஆண்டுகளாக நாங்கள் அதில் தீவிரமாக இருக்கிறோம்.

    பெரிய அளவுக்கான கடன்களை அனுமதிப்பதும், கண்காணிப்பதும் தனி பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் நீரவ் மோடி போன்ற சூழ்நிலைகளைத் தவிர்க்க முடியும். ஸ்விஃப்ட் பரிவர்த்தனைகள் கோர் வங்கி நடவடிக்கையுடன் இணைக்கப்பட்டுள்ளன. வங்கி மோசடிகளை குறைக்க இது உதவும்.

    கடன் தொகையை திரும்ப பெறுவதில், சாதனை செய்துள்ளோம். மொத்த செயல்படாத கடன்கள் ரூ .8.65 லட்சம் கோடியிலிருந்து ரூ .7.90 லட்சம் கோடியாக குறைந்துள்ளது. இவ்வாறு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+