இந்தியாவில் 8000 "X"தள கணக்குகளை முடக்க உத்தரவு.. மீறினால் அபராதம், ஜெயில் - பீஸ்ட் மோடில் அரசாங்கம்
டெல்லி: இந்தியாவில் எக்ஸ் சமூக ஊடகத் தளத்தில் உள்ள 8000 எக்ஸ் தள கணக்குகளை முடக்க இந்திய அரசாங்கம் உத்தரவிட்டுள்ளதாக எக்ஸ் நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவுக்கு இணங்கவில்லை எனில் உள்ளூர் ஊழியர்களுக்கு கடும் அபராதம் மற்றும் சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து, இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான தாக்குதல் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இந்நிலையில், எக்ஸ் வலைத்தள நிறுவனத்துக்கு 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கணக்குகளை மூடும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, 8 ஆயிரம் கணக்குகளை முடக்கும் பணியை எக்ஸ் நிறுவனம் தொடங்கியுள்ளது. இந்த உத்தரவுக்கு இணங்க தவறினால் அபராதம் மற்றும் சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக எக்ஸ் தரப்பில் கூறியுள்ளதாவது: இந்திய அரசாங்கத்தின் உத்தரவை ஏற்று இந்தியாவில் உள்ள 8000 எக்ஸ் வலைத்தள கணக்குகளை முடக்கும் பணியில் ஈடுபட்டுள்ளோம். ஆனாலும், இந்திய அரசாங்கத்தின் கோரிக்கைகள் மீது எங்களுக்கு உடன்பாடு இல்லை. இது எளிதான முடிவல்ல என்று தெரிவித்துள்ளது. மேலும், எந்த எக்ஸ் தள கணக்கில் இருந்து வந்த பதிவுகள் இந்தியாவின் சட்டங்களை மீறியுள்ளன என்று இந்திய அரசாங்கம் அடையாளம் காட்டவில்லை. கணக்குகளை முடக்குவதில் எங்களுக்கு எந்த ஆதாரமும், நியாமமும் இல்லை. ஆனாலும், அரசின் உத்தரவால் முடக்கப்படும் கணக்குகள் தொடர்பாக எக்ஸ் பயனர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் மேற்கொண்டு சட்ட உதவியை நாடலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பஹல்காம் சம்பவத்தை தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையே தாக்குதல்கள் நடைபெற்று வரும் நிலையில், பாகிஸ்தான் யூடியூப் சேனல்கள், செய்தி தளங்களை இந்திய அரசாங்கம் ஏற்கனவே முடக்கியிருந்தது. இந்நிலையில், நடிகர்களான ஃபவாட் கான், ஆதிஃப் அஸ்லாம், வசீம் அக்ரம் போன்ற கிரிக்கெட் வீரர்கள் உள்ளிட்ட முக்கிய நவர்கள் சமூக வலைதளங்களில் முடக்கப்பட்டுள்ளனர்.
-
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
திண்டுக்கல் கொடை ரோடு விஏஓ சத்யா கனவிலும் நினைக்காதது.. அரசு ஊழியர்கள் அறிய வேண்டிய பாடம் -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம்












Click it and Unblock the Notifications