24 மணி நேரத்தில் புதிதாக 27,114 பேருக்கு கொரோனா.. இந்தியாவில் 10 நாட்களாக எகிறும் கேஸ்கள்
டெல்லி: இந்தியாவில் 24 மணி நேரத்தில் புதிதாக 27,114 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதனால் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 8.20 லட்சமாக உயர்ந்துள்ளது.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உலக அளவில் கொரோனா பாதிப்பில் இந்தியா 3-ஆவது இடத்திற்கு வந்துள்ளது.

கடந்த ஜூலை மாதம் 1-ஆம் தேதி முதல் தினமும் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு புதிதாக பாதிப்புகள் ஏற்படுவதால் கொரோனா பாதிப்பு 7 லட்சத்திலிருந்து 8 லட்சத்திற்கு அதிகரித்தது.
பெரும்பாலான பாதிப்புகள் மகாராஷ்டிரத்திலிருந்து ஏற்பட்டவையாகும். இங்கு 2,38,461 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், தமிழகத்தில் 1,30,261 பேரும் டெல்லியில் 1,09,140 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
அது போல் குஜராத்தில் 40,069 பேரும் உத்தரப்பிரதேசத்தில் 33,700 பேரும், கர்நாடகத்தில் 33,418 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். கடந்த 24 மணி நேரத்தில் 19,873 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்கள்.
இதன் மூலம் இதுவரை 5,15,385 பேர் இந்தியாவில் குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்கள். அதனால் குணமடைவோர் சதவீதமும் 62.78 சதவீதமாக உயர்ந்துள்ளது. இதுகுறித்து மத்திய அரசு கூறுகையில் தீவிர கொரோனா சோதனையால் கொரோனா நோயாளிகள் விரைவாக கண்டறியப்படுகிறார்கள்.
லேசான அறிகுறி உள்ளவர்கள் கொரோனா பாதிக்கும் என சந்தேகத்துக்குரியவர்கள் வீட்டு கண்காணிப்பில் உள்ளனர் என்று தெரிவித்தது.
-
இனி இந்தியாவை தொட முடியாது.. ரஷ்யா அனுப்பிய புதிய எஸ் 400 வான்வெளி பாதுகாப்பு சிஸ்டம்.. செம -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம்












Click it and Unblock the Notifications