ஊழல் மிகுந்த நாடுகள் பட்டியல்.. மிக மோசமான நிலையில் இந்தியா.. பாகிஸ்தான், சீனா எங்கே?
டெல்லி: ட்ரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் என்ற அமைப்பு உலக நாடுகளிடையே நடக்கும் ஊழல் தொடர்பான பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் இந்தியா வெறும் 39 மார்குகளை மட்டுமே பெற்றுள்ளது. மேலும், சர்வதேச அளவில் அதிக ஊழல் நடக்கும் நாடுகள் லிஸ்டில் 91வது இடத்தையும் பிடித்துள்ளது. இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
ட்ரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் (Transparency International) என்ற அமைப்பு சர்வதேச அளவில் ஊழல் அதிகம் இருக்கும் நாடுகள் பட்டியலை வெளியிடும். அதன்படி இப்போது 2025ஆம் ஆண்டுக்கான ஊழல் பற்றிய புரிதல் குறியீட்டு ரிப்போர்ட் வெளியிடப்பட்டுள்ளது.

ஊழல் நாடுகள்
ஊழல் பற்றிய புரிதல், நிபுணர்கள் கருத்து, பொதுத் துறையில் உணரப்படும் ஊழல் ஆகியவற்றைக் கொண்டு இந்த லிஸ்ட் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் 100 மார்க் என்பது ஊழலில்லாத நிர்வாகத்தைக் குறிக்கிறது. அது மெல்லக் குறைந்து 0 மார்க் என்றால் அதிக ஊழல் என்று அர்த்தம். இந்த லிஸ்டிலும் வழக்கம் போல ஐரோப்பிய நாடுகளே ஊழலற்ற நாடுகளாக உள்ளன.
ஊழலற்ற நாடுகள்
இந்த லிஸ்டில் 89 மார்க் உடன் டென்மார்க் முதலிடத்தைப் பிடித்துள்ளது. தொடர்ந்து 88 மற்றும் 84 மார்க் உடன் பின்லாந்து மற்றும் சிங்கப்பூர் நாடுகள் 2 மற்றும் 3ம் இடத்தில் இருக்கிறது. தொடர்ந்து நியூசிலாந்து மற்றும் நார்வே நாடுகள் 81 மார்க் உடன் 4ம் இடத்தில் இருக்கிறது. ஸ்வீடன், சுவிட்சர்லாந்து, லக்சம்பர்க், நெதர்லாந்து, ஜெர்மனி, ஐஸ்லாந்து ஆகிய நாடுகள் டாப் 10ல் இடம் பெற்றுள்ளது. அமெரிக்கா 29வது இடத்தில் இருந்தாலும், இங்கிலாந்து 20வது இடத்தைப் பிடித்தது.
அதேபோல தெற்கு சூடான் மற்றும் சோமாலியா ஆகிய இரண்டும் ஒன்பது மார்க் பெற்று கடைசி இடத்தைப் பிடித்துள்ளது. வெனிசுலா, ஏமன், லிபியா, எர்தியா, சூடான ஆகிய நாடுகளில் ஊழல் அதிகமாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா எங்கே
182 நாடுகளைக் கொண்ட இந்த லிஸ்டில் இந்தியா 91ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. இந்தியாவுக்கு இதில் 39 மார்க் கொடுத்துள்ளனர். சர்வதேச சராசரியைக் காட்டிலும் இந்தியாவில் ஊழல் அதிகமாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிலும் பொதுத் துறையில் ஊழல்கள் அதிகம் இருப்பதாகக் கவலை எழுப்பப்பட்டுள்ளது. மேலும், இந்தியாவில் ஊழல் ஒரு தனிப்பட்ட பிரச்சனையல்ல.. மாறாக நிர்வாகம், பொறுப்புடைமை, வெளிப்படைத்தன்மை என ஒட்டுமொத்த நிறுவனங்களிலும் பரவியுள்ள ஒரு கட்டமைப்புப் பிரச்சனையாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில், இந்தியாவின் நிலை மிகக் குறைந்த அளவே முன்னேறியுள்ளது. சீர்திருத்தங்கள், டிஜிட்டல்மயமாக்கல் உள்ளிட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டாலும் கூட நிர்வாக சிக்கல்கள், அரசியல் தலையீடு, பலவீனமான கண்காணிப்பு அமைப்புகள் மற்றும் சட்டங்களை அமல்படுத்துவதில் உள்ள ஏற்றத்தாழ்வுகள் காரணமாக இந்தியாவில் பெரிய சீர்திருத்தம் நடக்கவில்லை. இவை ஊழல் எதிர்ப்பு நடவடிக்கைகளுக்குப் பெரும் தடையாக அமைவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்டை நாடுகள்
இந்தியாவின் அண்டை நாடுகளைப் பொறுத்தவரை சீனா 43 மார்க் உடன் 76வது இடம் மற்றும் பாகிஸ்தான் 28 மார்க் உடன் 136வது இடத்தில் இருக்கிறது. மற்ற அண்டை நாடுகளான பூட்டான் 71 மார்க் உடன் 18வது இடம், 32 மார்க் உடன் 109வது இலங்கை 35 மார்க்குடன் 107வது இடம், வங்கதேசம் 24 மார்க் உடன் 150வது இடத்தில் உள்ளன.
-
இந்தியாவில் கள்ளக்காதல் ஆப் கிளிடென்.. பெண்கள் எண்ணிக்கை 148 சதவீதம் உயர்வு.. பெங்களூர் முதலிடம் -
இந்தியா முழுக்க "போர் ஊரடங்கு?" தீயாக பரவும் தகவல்.. பொதுமக்கள் அதிர்ச்சி! மத்திய அரசு சொல்வது என்ன? -
துரந்தர் சம்பவம்.? பாக். கொடூர தீவிரவாதி மசூத் அசார் சகோதரர் மர்ம மரணம்! வரிசையாக விழும் விக்கெட்கள் -
ஹார்முஸில் இந்திய கப்பல்களுக்கு ஆபத்து? LPG பிரச்சனை தீராது போலயே! மிக முக்கிய தகவல் -
அமராவதிக்கு அங்கீகாரம்! முடிவுக்கு வந்த ஆந்திரா தலைநகர் குழப்பம்! சாதித்து காட்டிய சந்திரபாபு நாயுடு -
இனி E-20 petrol தான்.. பங்குகளுக்கு பறந்த உத்தரவு! பழைய வண்டிக்காரங்களுக்கு காத்திருக்கும் சிக்கல்! -
ஈரான் போரால்.. புதிய சிக்கல்கள்! நிலைமையை சமாளிக்க.. பிரதமர் நரேந்திர மோடி போட்ட முக்கிய உத்தரவு! -
பெற்றோரை பார்த்து கொள்ளவில்லை என்றால் "சம்பளம்" வராது.. வருகிறது புதிய சட்டம்! தண்டனைகள் என்ன? -
மக்கள்தொகை கணக்கெடுப்பு நாளை முதல் தொடக்கம்.. என்னென்ன ஆவணங்கள் வைத்திருக்க வேண்டும்! -
நாடு முழுவதும் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் இன்று தொடக்கம்! தமிழகத்தில் எப்போது? -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல்












Click it and Unblock the Notifications