இந்தியாவில் கொரோனா பாதிப்பில் இருந்து 2,46,674 பேர் டிஸ்சார்ஜ் - மீளும் நம்பிக்கை
நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 14,35,589 ஆக குறைந்துள்ளது.
டெல்லி: இந்தியாவில் ஒரே நாளில் 2,46,674 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். கொரோனா பாதிப்பில் இருந்து நாடு முழுவதும் மீண்டவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருவது மக்களிடையே நம்பிக்கையை அதிகரித்து வருகிறது.
இந்தியாவில் கடந்த சில தினங்களாக கொரோனா தினசரி பாதிப்பு சரிந்து வந்தது. இந்தநிலையில் தொடர்ந்து 2வது நாளாக குறைந்து வருகிறது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,49,394 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. நேற்றைய தொற்று எண்ணிக்கையை விட இது 13 சதவிகிதம் குறைந்துள்ளது.

இந்தியாவில் கொரோனா தொற்று பரவும் விகிதம் 9.27 சதவிகிதமாக உள்ளது. இதன்மூலம், இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 4,19,52,712 பேராக ஆக உயர்ந்துள்ளது.
நாடு முழுவதும் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையை விட குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,46,674 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதன் மூலம் இந்தியாவில் குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 3,97,70,414ஆக உயர்ந்துள்ளது.
இந்தியாவில் நேற்று 1,008 பேர் கொரோனாவால் உயிரிழந்த நிலையில் இன்று 1,072 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை நாட்டில் கொரோனா தொற்றால் இறந்தோர் எண்ணிக்கை 5,00,055 ஆக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 14,35,589 ஆக குறைந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம்.
கொரோனாவை தடுக்கும் ஒரே வழி தடுப்பூசி மட்டுமே என்பதால் நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் நேற்று வரை இந்தியாவில் ஒரே நாளில் 55,58,760 பேர் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இந்தியாவில் இதுவரை 168.47 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications