இந்தியாவில் ஓமிக்ரான் பாதிப்பு 415 ஆக உயர்வு- மத்திய சுகாதாரத் துறை
டெல்லி: இந்தியாவில் ஓமிக்ரானால் 415 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. அவர்களில் 115 பேர் மீண்டுவிட்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Recommended Video
இதுகுறித்து சுகாதாரத் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பில் மகாராஷ்டிராவில் மிக அதிகமாக 108 பேர் ஓமிக்ரானால் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

டெல்லியில் 79 பேருக்கும், குஜராத்தில் 43 பேருக்கும் தெலுங்கானாவில் 38 பேருக்கும் கேரளாவில் 37 பேருக்கும் தமிழகத்தில் 34 பேருக்கும், கர்நாடகாவில் 37 பேருக்கும் ஓமிக்ரான் பாதிக்கப்பட்டுள்ளது.
ஹரியானா, ஆந்திராவில் தலா 4 பேருக்கும் மேற்கு வங்கம், ஜம்முவில் தலா 3 பேருக்கும் உத்தரப்பிரதேசத்தில் இருவருக்கும் லடாக், சண்டீகர், உத்தரகண்டில் தலா ஒருவருக்கும் ஓமிக்ரான் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. வடகிழக்கு மாநிலங்களில் ஓமிக்ரான் பாதிப்பு இல்லை.
இந்தியாவில் கொரோனாவால் ஒரே நாளில் 7,189 பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இதுவரை இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3.47 கோடியாகும். இந்தியாவில் ஒரே நாளில் கொரோனாவால் 387 பேர் பலியாகிவிட்டனர். இதுவரை கொரோனாவுக்கு 4.79 லட்சம் பேர் பலியாகியுள்ளனர்.
இந்தியாவில் கொரோனாவால் 77,032 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்தியாவில் இதுவரை 141.01 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. ஒரே நாளில் 66 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.
இந்தியாவில் ஒரே நாளில் 7,286 பேர் கொரோனாவிலிருந்து மீண்டு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்கள். இதுவரை கொரோனாவிலிருந்து மீண்டோரின் எண்ணிக்கை 3.42 கோடியாகும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்த நிலையில் ஓமிக்ரான் பரவலால் மகாராஷ்டிராவில் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை 5 க்கும் மேற்பட்டோர் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அது போல் கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டங்களை கருத்தில் கொண்டு டெல்லி, ஹரியானாவிலும் கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. எனினும் தேவாலயங்கள் உள்ளிட்ட வழிபாட்டு தலங்கள் திறந்திருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications