இந்தியாவில் கொரோனா பாதிப்பு 300% அதிகரித்தும் அவசர சிகிச்சை படுக்கைகள் 19%தான் அதிகரிப்பு!
டெல்லி: இந்தியாவில் கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் தற்போதைய கொரோனா பாதிப்பு 300% அதிகரித்துள்ளது. ஆனால் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் அவசர சிகிச்சை படுக்கைகள் எண்ணிக்கை வெறும் 19%தான் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றன அரசு புள்ளி விவரங்கள்.
இந்தியாவில் முதலாவது கொரோனா அலை உச்சத்தில் இருந்த கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஒருநாள் பாதிப்பு 97,894. அதே மாதத்தில் இந்தியாவில் அவசர சிகிச்சை(ஐசியூ) படுக்கைகள் எண்ணிக்கை 63,578..
கடந்த ஏப்ரல் 4-ந் தேதி முதல் அலையின் உச்சத்தை தாண்டி ஒருநாள் பாதிப்பு 1.03 லட்சமானது. அப்போது உலக நாடுகளில் ஒருநாள் பாதிப்பில் 2-வது இடத்தில் இந்தியா இருந்தது. ஏப்ரல் 15-ந் தேதியன்று ஒருநாள் பாதிப்பு 2 லட்சமாகவும், ஏப்ரல் 22-ல் 3 லட்சமாகவும் உயர்ந்தது.

பாதிப்பும் படுக்கைகளும்
மே 1-ந் தேதியன்று இந்தியாவில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 4.01,993 ஆகவும் மே 7-ந் தேதி 4,14,188 ஆகவும் இந்த ஒருநாள் பாதிப்பு உயர்ந்தது. ஆனால் ஏப்ரல் மாதத்தில் இந்தியாவில் அவசர சிகிச்சை படுக்கைகள் எண்ணிக்கை 75,867 மட்டும்தான். அதாவது ஒருநாள் பாதிப்பு என்பது 323% அதிகரித்த போதும் கூட அவசர சிகிச்சை படுக்கைகள் எண்ணிக்கை 19%தான் அதிகரிக்கப்பட்டு இருந்தது என்கிறது அரசின் தகவல்கள்.

கடந்த ஆண்டு நிலவரம்
கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் இந்தியாவில் மொத்த அவசர சிகிச்சை படுக்கைகள் எண்ணிக்கை 24,000. கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதால் இந்த படுக்கைகள் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டிருந்தன. ஆனால் ஜனவரி மாதத்தில் அவசர சிகிச்சை படுக்கைகள் எண்ணிக்கை 36,008 ஆக குறைந்துவிட்டது. அப்போது இந்தியாவில் ஒருநாள் பாதிப்பு எண்ணிக்கை கணிசமாகவே குறைந்தது.

மாநில நிலவரங்கள்
இந்தியாவின் பல மாநிலங்களில் கடந்த சில வாரங்களாக ஒருநாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. ஆனால் கடந்த வாரத்தில் இருந்து ஒருநாள் பாதிப்பு எண்ணிக்கை சற்று குறையவும் தொடங்கியுள்ளது. அப்படியான நிலையிலும் பல மாநிலங்களில் அவசர சிகிச்சை படுக்கைகள் காலியாகவும் இல்லை என்கின்றன அரசு தரவுகள். மும்பையை எடுத்துக் கொண்டால் மொத்தம் 2,984 அவசர சிகிச்சை படுக்கைகளில் 277 மட்டும்தான் காலியாக உள்ளன

தமிழக நிலவரம்
கோவாவில் சனிக்கிழமை மாலை மொத்தம் உள்ள 249 அவசர சிகிச்சை படுக்கைகளில் எதுவும் காலி இல்லை. டெல்லியில் மொத்தம் உள்ள 6313 படுக்கைகளில் 558 மட்டும்தான் காலியாக இருந்தன. தமிழகத்தில் 8,957 அவசர சிகிச்சை படுக்கைகளில் 492 மட்டும் காலியாக இருந்தன. பிற மாநிலங்களை ஒப்பிடுகையில் கேரளா, சத்தீஸ்கரில் நிலவரம் பரவாயில்லை என்கிற அளவில்தான் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
90% பேருக்கு தெரியாது.. கலர் கலராக இருக்கும் ரயில்கள்.. ஒவ்வொன்றுக்கும் என்ன அர்த்தம் தெரியுமா! -
பெட்ரோல், டீசல் பற்றாக்குறை என பரவும் வதந்தி.. யாரும் நம்பாதீங்க! விளக்கமளித்த மத்திய அரசு -
ஹார்முஸ் நீரிணையை கடந்து.. இந்தியாவுக்கு வந்த 2 எல்பிஜி கப்பல்கள்! ஆனால் பிரச்சனை இன்னும் முடியல! -
"LPG கனெக்ஷன் மொத்தமாக நிறுத்தப்படும்.." மத்திய அரசு மிக முக்கிய எச்சரிக்கை! என்ன மேட்டர்? -
அமெரிக்கா அனுமதி கொடுத்தும்.. தயக்கம் காட்டும் இந்தியா! ஈரான் எண்ணெய் வாங்குவதில் பெரிய சிக்கல்! -
எல்பிஜி விஷயத்தில் இந்தியா சொதப்பல்! இனி வரும் நாட்கள் ரொம்ப கஷ்டம்! வார்னிங் வந்துடுச்சு -
ஈரானை அரவணைக்கும் இந்தியா.. மீண்டும் தொடங்கும் கச்சா எண்ணெய் வர்த்தகம்? மத்திய அரசு பிளான் -
ஈரானுடன் ரகசிய டீல்.. சைலன்ட்டாக அம்பானி சம்பவம்.. 2019க்கு பின் இந்தியா வரும் 50 லட்சம் பேரல் ஆயில் -
அனைத்து அத்தியாவசிய மருந்துகளின் விலையும் உயர்கிறது.. ஏப்ரல் 1 முதல் அமல்.. அதிர்ச்சி அறிவிப்பு -
போருக்கு நடுவே துபாய் செய்த காரியம்.. நெகிழ்ந்து போன இந்தியர்கள்.. இதை யாரும் எதிர்பார்க்கல -
இந்தியாவுக்கு வழிவிட்ட ஈரான்.. கேஸ் தட்டுப்பாடு சரியாகுமா? இல்லத்தரசிகளே இதை கவனியுங்க! -
"இந்தியா எங்கள் நண்பன்! ஹார்முஸை தாராளமாக கடக்கலாம்.." அனுமதி தந்த ஈரான்! உற்று பார்க்கும் அமெரிக்கா












Click it and Unblock the Notifications