பாருங்க.. இந்த நாட்டுலல்லாம் எப்படி கொரோனா குறைஞ்சிருக்கு.. நாமதான் சொதப்பல்.. ராகுல் காந்தி 'மேப்'
டெல்லி: லாக்டவுன் மூலமாக ஐரோப்பிய நாடுகளில் கொரானா வைரஸ் பரவல் கடத்தப்பட்ட நிலையில், இந்தியாவில் அதிகரித்து வருவதாக காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக டுவிட்டர் பதிவில் அவர் வரைபடம், மூலமாக விளக்கம் அளித்துள்ளார். ஸ்பெயின், ஜெர்மனி, இத்தாலி, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளின் வைரஸ் பரவல் வரைபடங்களுடன், இந்தியாவின் வைரஸ் பரவல் வரைபடத்தையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவில்தான், கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
இந்த வரைபடத்தை பார்க்கும்போது ஐரோப்பிய நாடுகளில் லாக்டவுன் ஆரம்பித்த காலத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்ததும், லாக்டவுன் தளர்வுக்கு பிறகு, பாதிப்புகள் குறைய தொடங்கியதும் தெரிகிறது.
அதாவது, அந்த நாட்டு அரசுகள், சரியாக முன்கூட்டியே திட்டமிட்டு இதை செயல்படுத்தி உள்ளதாக ராகுல் காந்தி, வரைபடம் மூலமாக, சுட்டிக்காட்டுகிறார்.

அதேநேரம் இந்தியாவில் லாக்டவுன் ஆரம்பித்த பிறகு ஏற்றம் கண்ட, கொரோனா வைரஸ் பாதிப்பு, லாக்டவுன் தளர்வுக்கு பிறகு இன்னமும் அதிகமாக உயர்ந்து கொண்டே செல்வதை இந்த மேப் மூலமாக அவர் சுட்டிக்காட்டுகிறார்.












Click it and Unblock the Notifications