புயலுக்கு இடையே.. அந்தமான் அருகே பிரமோஸ் ஏவுகணையை டெஸ்ட் செய்த இந்தியா.. திடீரென ஏன்? பின்னணி!
டெல்லி: இந்தியா ராணுவம் சார்பாக அந்தமான் - வங்கக்கடல் பகுதியில் பிரமோஸ் ஏவுகணை சோதனை செய்யப்பட்டுள்ளது.
இந்தியா - சீனா இடையே லடாக் எல்லையில் உரசல் ஏற்பட்டுள்ளது. இரண்டு நாடுகளுக்கும் இடையிலான உரசல் இன்னும் சரியாகவில்லை.
லடாக் மற்றும் அருணாசலப்பிரதேசம் அருகே இதற்காக இந்திய ராணுவம் பிரமோஸ் ஏவுகணைகளை குவித்து உள்ளது. சீனா அத்துமீறலாம் என்பதால் தரையில் இருந்து மற்றும் விமானத்தில் இருந்து தாக்கும் பிரமோஸ் ஏவுகணைகளை இந்தியா எல்லையில் குவித்து உள்ளது.

எப்படி
இந்த நிலையில்தான் தரையில் இருந்து இன்னொறு இடத்தில் இடத்திற்கு சென்று குறி வைத்து தாக்கி அழிக்கும் பிரமோஸ் ஏவுகணைகளை இந்திய ராணுவம் இன்று சோதனை செய்துள்ளது. அந்தமான் நிக்கோபார் தீவுகளில் இருந்து வங்கக்கடல் அருகே இருக்கும் தீவு ஒன்றில் இந்த சோதனை செய்யப்பட்டடுள்ளது.

வங்கக்கடல்
வங்கக்கடலில் தற்போது நிவர் புயல் உருவாகி உள்ளது. இங்கிருந்து சில கிலோ மீட்டர் தூரத்த்தில்தான் இந்த ஏவுகணை சோதனை செய்யப்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதியில் இருந்த சரக்கு கப்பல், போக்குவரத்து கப்பல்களுக்கு ஏற்கனவே எச்சரிக்கை விதிக்கப்பட்டது. இந்த வாரம் முழுக்க இப்படி நிறைய ஏவுகணை சோதனைகள் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏன் இப்படி
இன்று செய்யயப்பட்ட பிரமோஸ் ஏவுகணை தரையில் இருந்து இன்னொரு பகுதியில் தரையில் இலக்கை தாக்கி அழிக்கும் ஏவுகணை ஆகும். இந்த பிரமோஸ் ஏவுகணையின் துல்லியதன்மையை சோதனை செய்யும் வகையில் இந்த சோதனை நடந்துள்ளது. இந்த பிரமோஸ் ஏவுகணை 290 கிலோ மீட்டர் தூரம் இருக்கும் இலக்குகளை தாக்கும். மேக் 3 வேகத்தில் செல்லும் உலகிலேயே வேகமான ஏவுகணை ஆகும் இது.

இலக்கு
இந்தியாவிடம் 450 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் இலக்குகளை தாக்கும் பிரமோஸ் ஏவுகணைகளும் கூட உள்ளது. ஆனால் அதை இந்தியா சோதனை மட்டுமே செய்து வருகிறது. இந்த நிலையில் ரஷ்யாவுடன் இணைந்து பிரமோஸ் ஏவுகணையை அப்டேட் செய்ய இந்தியா முடிவு செய்துள்ளது.

800 கிலோ மீட்டர்
800 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் இலக்குகளை தாக்கும் வகையில் இந்தியா ரஷ்யாவுடன் இணைந்து பிரமோஸ் ஏவுகணைகளை உருவாக்க உள்ளது. இதற்கு முன்னோட்டமாக பிரமோஸ் ஏவுகணைகளின் துல்லியத்தன்மையை சோதனை செய்ய இந்தியா முடிவெடுத்து, அந்தமான் பகுதியில் இன்று சோதனை செய்யப்பட்டுள்ளது. இந்த சோதனை முடிவுகள் குறித்த விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications