கேம் ஓவர்.. மத்திய பிரதேசத்தில் பாஜகவிற்கு கிளியர் கட் வெற்றி! படுதோல்வி அடையும் காங்கிரஸ்.. கணிப்பு
போபால்: மத்திய பிரதேசத்தில் சட்டசபை தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில் பாஜக அங்கே கிளியர் கட் வெற்றியை பெறும், முழு மெஜாரிட்டி பெறும் என்று இந்தியா டுடே ஆக்சிஸ் மை இந்தியா கணிப்பு தெரிவித்துள்ளது. முக்கியமாக கடந்த முறை மெஜாரிட்டி பெற்று அதன்பின் ஆட்சியை இலண்டஹ் காங்கிரஸ் கட்சி கடந்த முறையை விட குறைவான இடங்களை பெற்று படுதோல்வி அடையும் என்று கணித்துள்ளது.
அங்கே 4 முறை சவுகான் முதல்வராக இருந்துவிட்டார். கடந்த முறையே ஆபரேஷன் கமலா மூலம்தான் ஆட்சிக்கு வந்தார். அதனால் இந்த முறை அவருக்கு வாய்ப்பு கொடுக்க பாஜக யோசித்ததுஇ. காங்கிரஸ் கட்சியும் பெண்களுக்கு மாதம் உதவிதொகை, இலவச பேருந்து பயணம் உள்ளிட்ட வாக்குறுதிகள் மூலம் அடித்து மேலே வந்தது. இருந்தாலும் இந்த முறையும் மத்திய பிரதேசத்தில் அங்கே பாஜகதான் ஆட்சியை பிடிக்கும் என்று இந்தியா டுடே - ஆக்சிஸ் மை இந்தியா கருத்து கணிப்பு தெரிவித்துள்ளது.
மத்திய பிரதேசத்தில் 230 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இங்கே பெரும்பான்மை பெறுவதற்கு 116 இடங்களில் வெல்ல வேண்டும்.
கருத்து கணிப்பு: மத்திய பிரதேசத்தில் சட்டசபை தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில் பாஜக கிளீன் ஸ்வீப் செய்யும், முழு மெஜாரிட்டி பெறும் என்று இந்தியா டுடே - ஆக்சிஸ் மை இந்தியா தெரிவித்துள்ளது.

அவர்கள் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பில், மத்தியப் பிரதேசத்தில் பாஜகவுக்கு 140-162 இடங்களும், காங்கிரஸுக்கு 68-90 இடங்களும் மற்றவர்களுக்கு 0-3 இடங்களும் கிடைக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அதாவது பாஜகவிற்கு கிளீன் வெற்றி என்று கணிக்கப்பட்டு உள்ளது.
மத்திய பிரதேச வரலாறு; மத்திய பிரதேசத்தில் கடந்த முறை கூட இப்படித்தான் நடந்தது. கடந்த தேர்தலில் அங்கே காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடித்தது. கடந்த தேர்தலில் காங்கிரஸ் 114, பாஜக 109 இடங்களில் வென்றது.
ஆனால் 1 வருடத்தில் அங்கே கமல்நாத் ஆட்சியை ஜோதிராதித்யா சிந்தியா கவிழ்த்தார். இவர் பாஜகவில் இணைந்து தன்னுடன் சில எம்எல்ஏக்களையும் அழைத்து சென்று ஆட்சியை கவிழ்த்தார். இதன்பின் வந்த இடைத்தேர்தலில் பாஜக கூடுதல் எம்எல்ஏக்களை மீண்டும் சிவராஜ் சிங் சவுகான் ஆட்சிக்கு வந்தார்; தொடர்ந்து நடந்த இடைத்தேர்தலில் பாஜக 19 இடங்களில் வென்றது. இதன் மூலம் 128 இடங்கள் என்று மெஜாரிட்டி பெற்று பாஜக ஆட்சிக்கு வந்தது.

கடந்த 4 முறையாக அங்கே பாஜகதான் ஆட்சி செய்து வருகிறது. 3 முறையாக வரிசையாக அங்கே 2005ல் இருந்து 2013 வரை அங்கே பாஜக ஆட்சி செய்தது. அதன்பின் மீண்டும் ஆப்ரேஷன் கமலாவுக்கு பின் கடந்த 4 ஆண்டுகளாக அங்கே ஆட்சி செய்தது.
தேர்தல் நடந்தது எப்போது - முடிவு எப்போது; பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையில் 5 மாநில சட்டப்பேரவை தேர்தல் நடந்து முடிந்துள்ளது. லோக்சபா தேர்தலுக்கு முன்னோட்டமாக இந்த 5 மாநில தேர்தல் பார்க்கப்படுகிறது. அடுத்த வருடம் ஏப்ரல் - மே மாதம் லோக்சபா தேர்தல் நடக்க உள்ளது. இதையடுத்து தற்போது 5 மாநில தேர்தல் முடிவுகள் அதற்கு வரப்போகும் டீசர் போல பார்க்கப்படுகிறது. இதில் மத்திய பிரதேசம் - நவம்பர் 14ம் தேதி தேர்தல் நடந்தது. வரும் டிசம்பர் 3ம் தேதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
-
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.! -
தமிழ் புத்தாண்டு பலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளுக்கான பலன்கள்.. யாருக்கு அதிர்ஷ்டம்? -
நல்ல பாம்பு கடித்த சிறுவனை கங்கையில் 12 மணி நேரம் மிதக்க விட்ட பெற்றோர்.. உடனே அதிசயம் நடந்ததா












Click it and Unblock the Notifications