டிரம்ப் vs மோடி.. முதல்முறை அமெரிக்காவை எதிர்க்க துணியும் இந்தியா.. ஈரானுக்கு கைகொடுக்க பிளான்!
அமெரிக்கா ஈரான் இடையே நிலவி வரும் பிரச்சனையில், இந்தியா அமெரிக்காவிற்கு எதிராக களமிறங்க முடிவெடுத்து இருப்பதாக செய்திகள் வருகிறது.
Recommended Video
டெல்லி: அமெரிக்கா ஈரான் இடையே நிலவி வரும் பிரச்சனையில், இந்தியா அமெரிக்காவிற்கு எதிராக களமிறங்க முடிவெடுத்து இருப்பதாக செய்திகள் வருகிறது.
அமெரிக்கா ஈரான் இடையே கடுமையான பிரச்சனைகள் நிலவி வருகிறது. ஈரான் அமெரிக்கவுடன் செய்திருந்த அணு ஆயுத ஒப்பந்தத்தை மதிக்கவில்லை என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் குற்றஞ்சாட்டினார்.
இதையடுத்து அணு ஆயுத ஒப்பந்தத்தை முறிக்க போவதாக ஈரான் தெரிவித்து வந்தது. இதனால் கோபம் அடைந்த அமெரிக்கா ஈரான் மீது 3 பொருளாதார தடைகளை விதித்து இருந்தது.

என்ன தடை
அதில் முதல் இரண்டு தடைகள் மிக முக்கியமானது. அதன்படி ஈரானிடம் இருந்து உலக நாடுகள் எதுவும் எண்ணெய், பெட்ரோல், டீசல் வாங்க கூடாது என்று இதில் குறிப்பிட்டது. இதற்கான தடை சென்ற வருடமே அமலுக்கு வந்தது. சீனா, இந்தியா, துருக்கிக்கு மட்டும் கூடுதல் கால அவகாசம் வழங்கப்பட்டு இருந்தது.

என்ன நடந்தது
இதையடுத்து கடந்த மே 2ம் தேதியுடன் இந்த கால அவகாசம் முடிவடைந்தது. துருக்கி தற்போது ஈரானிடம் இருந்து பெட்ரோல் வாங்குவதை மொத்தமாக நிறுத்திவிட்டது. சீனா இதில் இன்னும் தெளிவான முடிவை எடுக்கவில்லை. ஆனால் இந்தியா பெட்ரோல் வாங்குவதை தற்காலிகமாக தேர்தலை முன்னிட்டு நிறுத்தியது.

ஆனால் என்ன
ஆனால் அப்போதே இதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று இந்திய தரப்பு அமெரிக்காவிடம் கேட்டு இருந்தது. ஆனால் அதற்கு டிரம்ப் ஒப்புக்கொள்ளவில்லை. இந்த நிலையில், ஈரானிடம் இருந்து தொடர்ந்து எண்ணெய் வாங்க இருப்பதாக இந்திய முடிவெடுத்துள்ளது. அமெரிக்காவின் தடையை மீறி எண்ணெய்யை வாங்க உள்ளதாக தகவல்கள் வருகிறது.

விரைவில் ஒப்பந்தம்
இதற்காக இந்தியா ஈரானுடன் விரைவில் ஒப்பந்தம் போட போகிறது என்றும் கூறுகிறார்கள். நேரடியாக இந்தியா பெட்ரோல் டீசலை டெலிவரி செய்யும் வகையில் இந்த ஒப்பந்தம் போடப்பட உள்ளது என்று கூறப்படுகிறது. அதே சமயம் தடையை மீறி ஒப்பந்தம் நடப்பதால் முன்பை விட குறைந்த விலையில் பெட்ரோல் டீசலை ஈரானிடம் இருந்து வாங்க இந்தியா முடிவெடுத்து இருப்பதாக தெரிகிறது.

பிரச்சனை
ஈரான் அமெரிக்கா இடையில் நிலவும் பிரச்சனையில் ஏனோ எந்த ஒரு நாடும் அமெரிக்காவை எதிர்க்கவில்லை. சீனா, ரஷ்யா கூட அமெரிக்காவை எதிர்த்து கேள்வி கேட்கவில்லை. ஆனால் இதில் இந்தியாதான் முதல்முறை வித்தியாசமான முடிவை எடுத்து, அமெரிக்காவிற்கு எதிராக களமிறங்கி உள்ளது. ஈரானுடன் கைகோர்க்கும் மோடியின் முடிவு டிரம்ப் தரப்பிற்கு அதிர்ச்சியை அளித்துள்ளது.
-
அமெரிக்காவில் 30 இந்தியர்கள் கைது.. உடனடியாக நாடுகடத்த உத்தரவு "Operation Checkmate".. என்ன நடந்தது? -
ஒரு மணிநேரத்தில் பதிலடி கொடுத்த ஈரானின் IRGC படை.. ஆடிப்போய் நிற்கும் அமெரிக்கா.. இனி ரொம்ப கஷ்டம்! -
அமெரிக்காவின் புதிய வரி.. இந்தியாவுக்கு சுத்தி சுத்தி ஏகப்பட்ட 'அடி'.. திருப்பூர் மட்டும் எஸ்கேப்! -
இந்தியா மீது 12.5% கூடுதல் வரி விதிக்கும் டிரம்ப்.. பூதாகரமாக வெடிக்கும் Section 301 பிரச்சனை! -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
அந்தர் பல்டி அடிக்கும் டிரம்ப்.. 25% வரி 15 சதவீதமாக குறைப்பு.. வழிக்கு வந்த அமெரிக்கா! -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
Kuwait மீது திடீர் தாக்குதல் நடத்திய ஈரான்.. திரும்பும் பக்கமெல்லாம் ஏவுகணை சந்தம்.. பீதியில் மக்கள்! -
“இந்திய எல்லையை ஆக்கிரமித்திருக்கிறோம்..” நேபாள பிரதமரின் பேச்சால் உள்நாட்டில் வெடித்த சர்ச்சை! -
ஈரானின் முதுகெலும்பில் தாக்கிய CENTCOM.. டிரம்ப் போட்டுக்கொடுத்த பிளான்..? கச்சிதமாக முடித்த US Army! -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு












Click it and Unblock the Notifications