உங்ககிட்ட சர்டிபிகேட் கேட்கல.. தேவையில்லாம தலையிடாதீங்க... அமெரிக்காவை கடுமையாக எச்சரித்த இந்தியா
Recommended Video
டெல்லி: இந்தியாவில் மத சுதந்திரம் இல்லை என்ற அமெரிக்காவின் அறிக்கைக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. சிறுபான்மை சமூகங்களுக்கு எதிராக இந்து தீவிரவாத கும்பல் ஆண்டு முழுவதும் தாக்குதல் நடத்துவதாக அமெரிக்கா வெளியுறவுத்துறை அறிக்கை வெளியிட்ட நிலையில், எந்த ஒரு வெளிநாட்டு அரசிடமும் நற்பெயரை எதிர்பார்க்கவிலலை என இந்தியா கடுமையாக பதிலடி கொடுத்துள்ளது.
அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சகம் சர்வதேச மத சுதந்திரம் குறித்து 8 பக்கத்தில் அறிக்கை வெளியிட்டுள்ளது. மத சுதந்திரம் குறித்த அந்த அறிக்கையில் பிரதமர் மோடி தலைமையிலான இந்திய அரசு மீது கடுமையான குற்றச்சாட்டுகளை அமெரிக்கா முன்வைத்துள்ளது. அதில் இந்தியாவில் மத சுந்திரம் இல்லை என்றும் சிறுபான்மை சமூகங்களுக்கு எதிராக இந்து தீவிரவாத கும்பல் ஆண்டு முழுவதும் தாக்குதல் நடத்துவதாக குறிப்பிட்டுள்ளது.

மேலும் இந்திய அரசு 'பசு குண்டர்களின்' தாக்குதல்கள், குழு வன்முறை ஆகியவற்றுக்கு எதிராக செயல்படவில்லை என்றும் அமெரிக்கா குற்றம்சாட்டி உள்ளது. தாக்குதல் நடத்துவதை தடுக்க வேண்டிய இடத்தில் இருக்கும் அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் தவறு செய்பவர்களை பாதுகாக்கிறார்கள் என்றும், சிறுபாம்மையினர் உரிமைகளை பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளது.
இந்த அறிக்கையால் கடும் ஆத்திரம் அடைந்துள்ள இந்தியா அமெரிக்காவுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. எந்த ஒரு வெளிநாட்டு அரசு மற்றும் நிறுவனத்திடமிருந்து எந்தவொரு நற்பெயரையும் இந்தியா எதிர்பார்க்கவில்லை:என்றும் இந்தியாவின் உள்விவகாரங்களில் அமெரிக்கா தலையிட வேண்டாம் என்றும் வெளியுறவுத்துறை பதிலடி கொடுத்துள்ளது.
இது தொடர்பாக வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ராவேஷ் குமார் கூறுகையில், "இந்தியா மிகப்பெரிய ஜனநாயக நாடு. சகிப்புத்தன்மை மற்றும் நீண்ட கால அர்பணிப்பு கொண்ட பன்மைத்துவ மக்கள் வாழ்கிறார்கள். இந்திய அரசியலமைப்பு சிறுபான்மை மக்கள் உட்பட அனைத்து குடிமக்களுக்கும் அடிடை உரிமைகளை உறுதி செய்கிறது. மேலும் மத சுதந்திரத்தை பாதுகாக்கிறது. ஜனநாயக நிர்வாகம் அடிப்படை உரிமைகளை மேலும் பாதுகாக்கும். எந்த ஒரு வெளிநாட்டு அரசும், நிறுவனமும் எங்கள் நாட்டு மக்களின் உரிமைகளை பாதுகாக்கிறோம் என கூறவேண்டிய அவசியம் இல்லை. மதசுந்திரம் குறித்து கேள்வி எழுப்ப வேண்டிய தேவையும் இல்லை. இந்தியாவின் உள்நாட்டு விவாகரங்களில் அமெரிக்கா தலையிட வேண்டாம்' இவ்வாறு கூறியுள்ளார்.
-
சிங்கப்பூரில் இந்தியாவை பாராட்டிய அமெரிக்க பாதுகாப்பு துறை அமைச்சர்.. வியந்து போய் சொன்ன விஷயம் -
ஒரு மணிநேரத்தில் பதிலடி கொடுத்த ஈரானின் IRGC படை.. ஆடிப்போய் நிற்கும் அமெரிக்கா.. இனி ரொம்ப கஷ்டம்! -
ஈரானின் முதுகெலும்பில் தாக்கிய CENTCOM.. டிரம்ப் போட்டுக்கொடுத்த பிளான்..? கச்சிதமாக முடித்த US Army! -
Kuwait மீது திடீர் தாக்குதல் நடத்திய ஈரான்.. திரும்பும் பக்கமெல்லாம் ஏவுகணை சந்தம்.. பீதியில் மக்கள்! -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
இந்தியாவில் எகிறும் சிசேரியன் பிரசவங்கள்.. தனியார் ஆஸ்பத்திரிகளை அம்பலப்படுத்திய ரிப்போர்ட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications