இலங்கை குண்டுவெடிப்பு… அப்பாவிகள் மீதான தாக்குதல்களை ஏற்க முடியாது…ராம்நாத், ஜெட்லி கண்டனம்
Recommended Video
டெல்லி:இலங்கை குண்டுவெடிப்புக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், அருண் ஜெட்லி, மமதா பானர்ஜி உள்ளிட்ட பலர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
கிறிஸ்தவர்கள் கொண்டாடும் ஈஸ்டர் திருநாளை முன்னிட்டு இலங்கையில் பல்வேறு ஆலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. கொச்சிக்கடை செயின்ட் அந்தோணியார் , நீர்க்கொழும்பு செபஸ்டியான் ஆலயம் , மட்டக் களப்பில் உள்ள சீயோன் ஆலயம் ஆகிய 3 ஆலயங்களில் பிரார்த்தனையின் போது பலத்த சப்தத்துடன் குண்டு வெடித்தது.
அதில் பலர் ரத்த காயங்களுடன் விழுந்தனர். சம்பவம் அறிந்த போலீசார் மற்றும் மீட்பு படையினர் ஆலயங்களில் பாதிக்கப்பட்டவர்களை மீட்டு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த தாக்குதலில் சுமார் 200 பேர் வரை பலியாகி உள்ளனர்.

வேண்டுகோள்
உலகம் முழுவதும் இந்த தாக்குதல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. நாட்டு மக்கள் அமைதியாக இருக்குமாறு அதிபர் சிறிசேனா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
|
ராம்நாத் கோவிந்த் கண்டனம்
இந்த கொடூர தாக்குதலுக்கு இந்தியாவும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தமது அதிர்ச்சியை வெளியிட்டுள்ளார். டுவிட்டரில் அவர் கூறியிருப்பதாவது:

தாக்குதல்களை ஏற்க முடியாது
இலங்கையில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலை இந்தியா கடுமையாக கண்டிக்கிறது. அப்பாவி மக்கள் மீதான தாக்குதல்களை ஏற்க முடியாது. மக்கள் வாழுமிடத்தில் தீவிரவாதத்துக்கு இடமில்லை. இந்த விவகாரத்தில் இலங்கைக்கு இந்தியா துணை நிற்கும் என்று தெரிவித்துள்ளார்.
|
அமைச்சர் ஜெட்லி கண்டனம்
மத்திய அமைச்சர் அருண் ஜெட்லியும் தமது கண்டனத்தை தெரிவித்து இருக்கிறார். டுவிட்டரில் அவர் கூறியிருப்பதாவது:அப்பாவி மக்கள் தாக்குதலில் கொல்லப்பட்டிருப்பது கவலை அளிக்கிறது.

பிரார்த்தனை செய்கிறேன்
இதுபோன்ற மனிதநேயமற்ற தாக்குதல் மிகவும் கண்டிக்கத்தக்கது. உயிரிழந்த நபர்களுக்கும், அவர்களது குடும்பங்களுக்கும் எனது பிரார்த்தனை எப்போதும் உண்டு. காயம் அடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன் என்று கூறியிருக்கிறார்.
|
மமதான பானர்ஜி அதிர்ச்சி
குண்டு வெடிப்பு தொடர்பாக மமதா பானர்ஜி வெளியிட்டுள்ள டுவிட்டரில், குண்டு வெடிப்பு செய்தியை கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். எந்த வகையிலும் வன்முறையை ஏற்றுக் கொள்ள முடியாது. குண்டு வெடிப்பில் பாதிக்கப் பட்டவர்களின் குடும்பங்களுக்காக பிரார்த்திகிறேன் என்றார்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications