இலங்கை குண்டுவெடிப்பு… அப்பாவிகள் மீதான தாக்குதல்களை ஏற்க முடியாது…ராம்நாத், ஜெட்லி கண்டனம்
Recommended Video
டெல்லி:இலங்கை குண்டுவெடிப்புக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், அருண் ஜெட்லி, மமதா பானர்ஜி உள்ளிட்ட பலர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
கிறிஸ்தவர்கள் கொண்டாடும் ஈஸ்டர் திருநாளை முன்னிட்டு இலங்கையில் பல்வேறு ஆலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. கொச்சிக்கடை செயின்ட் அந்தோணியார் , நீர்க்கொழும்பு செபஸ்டியான் ஆலயம் , மட்டக் களப்பில் உள்ள சீயோன் ஆலயம் ஆகிய 3 ஆலயங்களில் பிரார்த்தனையின் போது பலத்த சப்தத்துடன் குண்டு வெடித்தது.
அதில் பலர் ரத்த காயங்களுடன் விழுந்தனர். சம்பவம் அறிந்த போலீசார் மற்றும் மீட்பு படையினர் ஆலயங்களில் பாதிக்கப்பட்டவர்களை மீட்டு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த தாக்குதலில் சுமார் 200 பேர் வரை பலியாகி உள்ளனர்.

வேண்டுகோள்
உலகம் முழுவதும் இந்த தாக்குதல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. நாட்டு மக்கள் அமைதியாக இருக்குமாறு அதிபர் சிறிசேனா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
|
ராம்நாத் கோவிந்த் கண்டனம்
இந்த கொடூர தாக்குதலுக்கு இந்தியாவும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தமது அதிர்ச்சியை வெளியிட்டுள்ளார். டுவிட்டரில் அவர் கூறியிருப்பதாவது:

தாக்குதல்களை ஏற்க முடியாது
இலங்கையில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலை இந்தியா கடுமையாக கண்டிக்கிறது. அப்பாவி மக்கள் மீதான தாக்குதல்களை ஏற்க முடியாது. மக்கள் வாழுமிடத்தில் தீவிரவாதத்துக்கு இடமில்லை. இந்த விவகாரத்தில் இலங்கைக்கு இந்தியா துணை நிற்கும் என்று தெரிவித்துள்ளார்.
|
அமைச்சர் ஜெட்லி கண்டனம்
மத்திய அமைச்சர் அருண் ஜெட்லியும் தமது கண்டனத்தை தெரிவித்து இருக்கிறார். டுவிட்டரில் அவர் கூறியிருப்பதாவது:அப்பாவி மக்கள் தாக்குதலில் கொல்லப்பட்டிருப்பது கவலை அளிக்கிறது.

பிரார்த்தனை செய்கிறேன்
இதுபோன்ற மனிதநேயமற்ற தாக்குதல் மிகவும் கண்டிக்கத்தக்கது. உயிரிழந்த நபர்களுக்கும், அவர்களது குடும்பங்களுக்கும் எனது பிரார்த்தனை எப்போதும் உண்டு. காயம் அடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன் என்று கூறியிருக்கிறார்.
|
மமதான பானர்ஜி அதிர்ச்சி
குண்டு வெடிப்பு தொடர்பாக மமதா பானர்ஜி வெளியிட்டுள்ள டுவிட்டரில், குண்டு வெடிப்பு செய்தியை கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். எந்த வகையிலும் வன்முறையை ஏற்றுக் கொள்ள முடியாது. குண்டு வெடிப்பில் பாதிக்கப் பட்டவர்களின் குடும்பங்களுக்காக பிரார்த்திகிறேன் என்றார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications