நேற்று ரஜினி வீடு... இன்று டெல்லி... கலவரம் நிகழ்ந்த பகுதிகளில் ஜமாத்துல் உலமா சபை ஆய்வு
டெல்லி: டெல்லியில் கலவரம் நிகழ்ந்த பகுதிகளை தமிழக ஜமாத்துல் உலமா சபை குழுவினர் இன்று நேரில் சென்று பார்வையிட்டனர்.
நடிகர் ரஜினிகாந்த்தை நேற்று அவரது இல்லத்தில் சந்தித்து பேசிய நிலையில் இன்று டெல்லிக்கு சென்று கலவரத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஜமாத்துல் உலமா சபை ஆய்வு செய்வது முக்கியமானதாக கருதப்படுகிறது. கடந்த 24-ம் தேதி வடகிழக்கு டெல்லியில் உள்ள சாந்த்பாக், பஜன்புரா, கோகுல்புரி, ஜாஃப்ராபாத் ஆகிய இடங்களில் கலவரம் வெடித்தது. சி ஏ ஏ -வுக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் மீது அடையாளம் தெரியாத நபர்கள் கண்மூடித்தனமான தாக்குதல் நடத்தினர்.

இதனால் டெல்லியே கலவரக் காடாக காட்சியளித்தது. எங்கு நோக்கினும் பதற்றம் நிறைந்த பகுதிகளாகவே பார்க்கப்பட்டது. இத்தனைக்கும் அன்றைய தினம் வல்லரசு நாடான அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்தியா வந்திருந்தார். இதனால் வட கிழக்கு பகுதியில் நிகழ்ந்த தாக்குதல் சம்பவங்களும், கலவரமும் உலக மீடியாக்களில் எதிரொலித்தன. இந்தியாவை பற்றி சர்வதேச ஊடகங்கள் கிழித்தெடுத்தன. இதையடுத்து சுதாரித்துக்கொண்ட மத்திய உள்துறை கலவரத்தை கட்டுக்குள் கொண்டு வர நடவடிக்கை எடுத்தது.

இந்நிலையில் அந்த சம்பவத்தை கண்டித்து இந்திய யூனியன் முஸ்லீம் லீக் சார்பில் இன்று டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடைபெற்றது. அதில் தமிழக கமாத்துல் உலமா சபை நிர்வாகிகள் கலந்துகொண்டு ஆதரவு தெரிவித்தனர். மேலும், சி ஏ ஏ-வுக்கு எதிராக தமிழகத்தில் நடைபெற்று வரும் போராட்டங்கள் பற்றியும் அவர்கள் எடுத்துரைத்தனர். பிரதமர் மோடிக்கு மிகவும் நெருக்கமானவர் எனக் கருதப்படும் நடிகர் ரஜினிகாந்த்தை நேற்று அவர்கள் சந்தித்து பேசியதும், அவர்களுக்கு ரஜினி ஒரு சில உறுதிகளை கொடுத்ததும் முக்கியமானது.
இந்நிலையில் இன்று டெல்லியில் கலவரத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டதுடன், கும்பல் தாக்குதலுக்கு பலியானவர்கள் குடும்பத்தை சந்தித்து ஆறுதல் கூறவும் உள்ளனர். மேலும், கலவரத்தால் வீடு, உடைமைகளை இழந்து நிற்கதியாக நிற்பவர்களை சந்தித்து அவர்களுக்கு ஆறுதல் தெரிவிக்கவும் திட்டமிட்டுள்ளார்கள்.
-
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
29 தொகுதிகள்.. காங்கிரஸை விட 1 கூடுதலாக.. நாளை மறுநாள் அதிமுக - பாஜக ஒப்பந்தம் கையெழுத்து? -
”90 சீட், 2.5 வருடம் முதல்வர்” பேரம் பேசுனாங்க.. விஜய் சொன்ன ஒரே வார்த்தை! போட்டு உடைத்த ஆதவ் அர்ஜுனா -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
சிறகடிக்க ஆசை: மீனா கண்ட காட்சி.. மீண்டும் ஜெயித்த ரோகிணி.. விஜயா வீட்டில் கொண்டாட்டம்! கடுப்பில் மனோஜ் -
ரெடியாகும் முக்கோண சாலை.. கோவை - திருச்சி - கரூர்.. தமிழ்நாட்டின் மிக முக்கிய பசுமை வழிச்சாலை! -
இந்தியாவில் இறங்கிய 7 வெளிநாட்டவர்.. கைமாறிய ஆயுதங்கள்.. சத்தமே இல்லாமல் தட்டி தூக்கிய என்ஏஐ!












Click it and Unblock the Notifications