IRCTC: டிக்கெட் புக்கிங்.. யுபிஐ-யில் பேமெண்ட் செய்தால் கூடுதல் கட்டணமா? ரயில்வே அமைச்சர் கொடுத்த பதில்
டெல்லி: ஐஆர்சிடிசியில் டிக்கெட் முன்பதிவு செய்யும் போது கூகுள் பே, போன் பே போன்ற யுபிஐகளை பயன்படுத்தி பரிவர்த்தனை மேற்கொண்டால் கூடுதலாக ரூ.10 கட்டணம் பிடித்துக்கொள்வது பற்றி ராஜ்யசபாவில் எம்பி சஞ்சய் சிங் கேள்வி எழுப்பினார். இதற்கு மத்திய ரயில்வே அமைச்சர் விளக்கமளித்துள்ளார். அவர் கூறிய பதிலின் விவரங்களை பார்க்கலாம்.
ரயில் டிக்கெட்டுகளை ஆன்லைன் முறையில் முன்பதிவு செய்பவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.. கவுண்ட்டரில் கால் கடுக்க நின்று டிக்கெட் புக் செய்த காலம் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வருகிறது.

ஏன் கூடுதல் கட்டணம் வசூல்?
வீட்டில் இருந்தபடியே, செல்போன் மூலமே டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதி வந்துவிட்டதால் பயணிகள் பலரும் தற்பொது ஐஆர்சிடிசி செயலி வழியாகவே டிக்கெட்டை முன்பதிவு செய்கிறார்கள். அதிலும் யுபிஐ வழியாக டிக்கெட் முன்பதிவுக்கு பேமெண்ட் செலுத்தும் வசதி வந்த பிறகு, பணம் செலுத்துவது எளிதான நடைமுறையாக இருப்பதால் பயணிகள் பலரும் இந்த முறையையே பயன்படுத்த தொடங்கிவிட்டனர்.
இந்த நிலையில்தான், ஆன்லைன் முன்பதிவின் போது டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கு கூடுதலாக ரூ.10 ம், ஏசி வகுப்புகளுக்கு ரூ.20 ம் யுபிஐ வழியாக புக் செய்யும் போது பிடித்தம் செய்யப்படுவதாகவும், யுபிஐ பயன்பாட்டை மக்களிடையே அரசு பிரபலப்படுத்தி வரும் நிலையில் ஏன் இந்த கட்டண பிடிப்பு என்று மாநிலங்களவையில் சஞ்சய் சிங் எம்பி கேள்வி எழுப்பினார்.
மத்திய அமைச்சர் விளக்கம்
இந்தக் கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்துள்ள மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறியதாவது:- ஆன்லைன் முறையில் டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதியால் பயணிகளின் அலைச்சல் மற்றும் பயண செலவு மிச்சமாகிறது. ஆன்லைன் டிக்கெட் வசதியை வழங்குவதற்கும், பராமரிப்பு செலவை ஈடுகட்டுவதற்கும் ஐ.ஆர்.சி.டி.சி கணிசமான தொகை செலவு செய்கிறது.
டிக்கெட் புக்கிங் வசதியை மேம்படுத்துதல் மற்றும் விரிவுபடுத்துதல் உள்ளிட்ட பணிகளுக்காக வசதி (convenience) கட்டணம் பெயரளவில் வசூலிக்கப்படுகிறது. தற்போது 87 சதவீத டிக்கெட் முன்பதிவு ஆன்லைன் வழியாகவே நடைபெறுகிறது" என்றார்.
போலி டிக்கெட் முன்பதிவு
ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில், போலியாக பலரும் டிக்கெட் முன்பதிவு செய்து அதிக தொகைக்கு விற்பனை செய்வதாகவும் புகார்கள் எழுந்தன. இதையடுத்து அதை முறைப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை ஐஆர்சிடிசி எடுத்து வருகிறது.
மோசடிகளை தடுக்கும் வகையில் தற்போது தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்ய ஆதார் எண் இணைக்கப்பட்ட ஐடிகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படுகிறது. அதேபோல, 2.5 கோடிக்கும் அதிகமாக பயனர் ஐடிகள் அண்மையில் முடக்கப்பட்டு இருந்தது.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications