மல்யுத்த வீரர்கள் மீது பாய்ந்த வழக்குகள்.. சர்வாதிகாரம் ஓங்குகிறதா..சாக்க்ஷி மாலிக்'நறுக்' கேள்வி
டெல்லி: புதிய நாடாளுமன்ற கட்டிடம் திருப்பு விழாவின் போது அதன் வளாகத்தின் எதிரே மல்யுத்த வீரர்கள் பாஜக எம்பிக்கு எதிராக பாலியல் குற்றச்சாட்டை வைத்து போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்ட நிலையில், நாட்டில் சர்வாதிகாரம் ஓங்குகிறதா? என மல்யுத்த வீராங்கனை சாக்க்ஷி மாலிக் கேள்வியெழுப்பியுள்ளார்.
லக்னோ தேசிய மல்யுத்த பயிற்சி முகாமில் பயிற்சி பெறும் வீராங்கனைகள் அங்குள்ள பயிற்சியாளர்களால் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்படுவதாகவும், மல்யுத்த கூட்டமைப்பின் முன்னாள் தலைவரும் பாஜக எம்பியுமான பிரிஜ் பூஷன் சரண் சிங்கால் 10க்கும் அதிகமான பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் குற்றம்சாட்டி உலக சாம்பின்ஷிப் பதக்கம் வென்ற விக்னேஷ் போகத், சரிதா, ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற பஜ்ரங் புனியா, ஷாக்ஷி மாலிக் உட்பட சுமார் 30 வீரர்/வீராங்கனைகள் கடந்த ஜனவரியில் டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடக்கத்தில் அரசியல் கட்சியினரின் ஆதரவையும் இவர்கள் விரும்பவில்லை. இப்படி இருக்கையில், மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகம் இவர்களின் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிப்பதாகவும், விவகாரம் குறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் வாக்குறுதி கொடுத்திருந்தது. இதனையடுத்து வீரர்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றுக்கொண்டனர்.
ஆனால் விளையாட்டுத்துறை அமைச்சகம் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என்று மீண்டும் வீரர்கள்/வீராங்கனைகள் ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட தொடங்கினர். இந்த முறை அரசியல் கட்சிகள், விவசாயிகள் உள்ளிட்டோரின் ஆதரவுகளை கேட்டனர். மட்டுமல்லாது டெல்லி காவல் நிலையத்தில் புகார் அளித்த போது அவர்கள் இந்த புகாரை பதிவு செய்யாமல் இழுத்தடித்தனர். இதனையடுத்து வீரர்கள் நீதிமன்றத்தை அணுகினர். நீதிமன்றம் புகாரை பதிவு செய்ய வேண்டும் என்று கூறி உத்தரவிட்டது.
இதனையடுத்து மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரும் பாஜக எம்பியுமான பிரிஜ் பூஷன் சரண் சிங்குக்கு எதிராக புகார் பதிவு செய்யப்பட்டது. ஆனால் இவர் தற்போது வரை கைது செய்யப்படவில்லை. எனவே இந்த சம்பவத்தில் ஈடுபட்ட அனைவரும் கைது செய்யப்பட வேண்டும் என மல்யுத்த வீரர்கள்/வீராங்கனைகள் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில், புதிய நாடாளுமன்ற கட்டிடம் நேற்று (மே.28) திறக்கப்பட்டது.
இதனையடுத்து, தங்களுடைய புகார் மீது மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பாஜக எம்பியை பதவி நீக்கம் செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தி புதிய நாடாளுமன்ற கட்டிடத்தின் வளாகத்தில் மல்யுத்த வீரர்கள்/வீராங்கனைகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் வலுக்கட்டாயமாக கைது செய்தனர். இதனையடுத்து இவர்கள் மீது ஐபிசி பிரிவு 147, 149, 186, 188, 332, 353, PDPP சட்டத்தின் பிரிவு 3 ஆகியவற்றின் கீழ் டெல்லி போலீஸ் வழக்குப்பதிவு செய்துள்ளது.

இது நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக நடவடிக்கை எடுக்காமல் தங்களுடைய எம்பியை பாஜக பாதுகாப்பதாக காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகள் கடுமையாக விமர்சித்துள்ளன. இந்நிலையில், நாட்டில் சர்வாதிகாரம் ஓங்குகிறதா? என மல்யுத்த வீராங்கனை சாக்க்ஷி மாலிக் கேள்வியெழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக அவர் பதிவிட்டுள்ள ட்வீட்டில், "பாலியல் புகாரில் குற்றம்சாட்டப்பட்ட பிரிஜ் பூஷன் மீது வழக்குப்பதிவு செய்ய 7 நாட்கள் எடுத்துக்கொண்ட டெல்லி காவல்துறை, அமைதியாக போராட்டம் நடத்திய எங்கள் மீது வழக்குப்பதிவு செய்ய 7 மணி நேரத்தை கூட எடுத்துக்கொள்ளவில்லை. நாட்டில் சர்வாதிகாரம் ஓங்குகிறதா? அரசு தனது விளையாட்டு வீரர்களை எப்படி நடத்துகிறது என்பதை உலகம் பார்த்துக் கொண்டிருக்கிறது" என்று கூறியுள்ளார்.
-
Thaai Kizhavi OTT: ஓடிடியில் வெளியாகும் தாய் கிழவி.. எப்போது, எதில் பர்க்கலாம்? வெளியான தகவல் -
அரபு நாடுகளில் இந்தியர்களின் 12, 000 கோடி முதலீடு காலி.. 800 நிறுவனங்கள் எதிர்காலம் கேள்விக்குறி! -
கோவை தெற்கில் களமிறங்கும் மகேந்திரன்.. ஆதரவாக இருக்கும் செந்தில் பாலாஜி.. கணக்கு போடும் ஸ்டாலின்! -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
திருப்பரங்குன்றம் வழக்கு.. நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் உத்தரவுக்கு இரு நீதிபதிகள் அமர்வு இடைக்கால தடை -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
காட்டி கொடுக்கும் ரஷ்யா.. அமெரிக்க படைகள் தலைக்கு மேல் சுற்றும் கத்தி.. பெரிய சிக்கலில் டிரம்ப்? -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
ஆதவை கண்டித்த ரஜினிகாந்த்..பாஜக சரத்குமாரை எப்போது கண்டிப்பிங்க.. வீடியோவால் சூப்பர் ஸ்டாரை சீண்டும் தவெக -
முதல் விக்கெட்? திமுக கூட்டணிக்கு ‘குட்பை' சொல்லும் வேல்முருகன்.. அதிருப்திக்கு என்ன காரணம்? பின்னணி இதுதான்












Click it and Unblock the Notifications