வன்முறை நடப்பதற்கு 3 மணி நேரத்திற்கு முன்பே முகமூடி மனிதர்கள் குறித்து தகவல் அளித்தோம்.. ஆயிஷ் கோஷ்
Recommended Video
டெல்லி: ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் வன்முறை நடப்பதற்கு 3 மணி நேரத்திற்கு முன்னரே மர்மநபர்கள் நடமாட்டம் குறித்து காவல்துறைக்கு தகவல் கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.
டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக சபர்மதி விடுதிக்குள் ஞாயிற்றுக்கிழமை இரவு ஆயுதங்களுடன் முகமூடி அணிந்த சிலர் உள்ளே நுழைந்து விடுதியை அடித்து நொறுக்கியுள்ளனர்.
இதில் மாணவர் சங்க தலைவரான ஆயிஷ் கோஷின் மண்டை உடைந்தது. மேலும் பல மாணவர்கள் படுகாயம் அடைந்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

போன்
இதுகுறித்து மாணவர் சங்கத் தலைவர் ஆயிஷ் கோஷ் ஆங்கில் நாளிதழ் ஒன்றுக்கு சிறப்பு பேட்டி அளித்துள்ளார். அவர் கூறுகையில் கல்லூரி வளாகத்தில் எப்போது சமூக விரோதிகளை பார்த்தோமோ உடனடியாக வசந்த்கஞ்ச் காவல் நிலைய அதிகாரிக்கு நான் பல முறை போன் செய்தேன்.

துரதிருஷ்டவசம்
வாட்ஸ் ஆப்பில் மெசேஜும் அனுப்பினோம். வன்முறை நடப்பதற்கு 3 மணி நேரத்திற்கு முன்பே அனுப்பிவிட்டோம். டெல்லி போலீஸ் நினைத்திருந்தால் எங்கள் மாணவர்கள், பேராசிரியர்கள் மீது தாக்குதல் நடத்தாத வண்ணம் காப்பாற்றியிருக்கலாம். ஆனால் துரதிருஷ்டவசமாக அது நடக்கவில்லை என்றார்.

அனுமதி
இதுகுறித்து போலீஸார் கூறும் போது ஜாமியா பல்கலைக்கழகத்தில் எப்போது நாங்கள் அனுமதியில்லாமல் சென்றதை பெரிய பிரச்சினையாக எழுப்பினர். அதனால் டெல்லி ஜேஎன்யுவில் 7 மணிக்கு நுழைவதற்கு அனுமதி கிடைத்தவுடன் நாங்கள் நுழைந்தோம் என்றனர்.

ஆர் எஸ் எஸ்
மேலும் சிலர் ஞாயிற்றுக்கிழமை 2.30 மணி முதல் காவல் துறை கட்டுப்பாட்டு அறைக்கு 50-க்கும் மேற்பட்ட முறை போலீஸுக்கு போன் செய்தனர். ஆனால் ஒரு பயனும் இல்லை என்கின்றனர். மாணவர் சங்க தலைவர் ஆயிஷ் கோஷ், ஆர் எஸ் எஸ் அமைப்பினர் கல்லூரிக்குள் நுழைந்துவிட்டனர் என வாட்ஸ்ஆப்பில் தெரிவித்துள்ளார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications