வன்முறை நடப்பதற்கு 3 மணி நேரத்திற்கு முன்பே முகமூடி மனிதர்கள் குறித்து தகவல் அளித்தோம்.. ஆயிஷ் கோஷ்
Recommended Video
டெல்லி: ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் வன்முறை நடப்பதற்கு 3 மணி நேரத்திற்கு முன்னரே மர்மநபர்கள் நடமாட்டம் குறித்து காவல்துறைக்கு தகவல் கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.
டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக சபர்மதி விடுதிக்குள் ஞாயிற்றுக்கிழமை இரவு ஆயுதங்களுடன் முகமூடி அணிந்த சிலர் உள்ளே நுழைந்து விடுதியை அடித்து நொறுக்கியுள்ளனர்.
இதில் மாணவர் சங்க தலைவரான ஆயிஷ் கோஷின் மண்டை உடைந்தது. மேலும் பல மாணவர்கள் படுகாயம் அடைந்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

போன்
இதுகுறித்து மாணவர் சங்கத் தலைவர் ஆயிஷ் கோஷ் ஆங்கில் நாளிதழ் ஒன்றுக்கு சிறப்பு பேட்டி அளித்துள்ளார். அவர் கூறுகையில் கல்லூரி வளாகத்தில் எப்போது சமூக விரோதிகளை பார்த்தோமோ உடனடியாக வசந்த்கஞ்ச் காவல் நிலைய அதிகாரிக்கு நான் பல முறை போன் செய்தேன்.

துரதிருஷ்டவசம்
வாட்ஸ் ஆப்பில் மெசேஜும் அனுப்பினோம். வன்முறை நடப்பதற்கு 3 மணி நேரத்திற்கு முன்பே அனுப்பிவிட்டோம். டெல்லி போலீஸ் நினைத்திருந்தால் எங்கள் மாணவர்கள், பேராசிரியர்கள் மீது தாக்குதல் நடத்தாத வண்ணம் காப்பாற்றியிருக்கலாம். ஆனால் துரதிருஷ்டவசமாக அது நடக்கவில்லை என்றார்.

அனுமதி
இதுகுறித்து போலீஸார் கூறும் போது ஜாமியா பல்கலைக்கழகத்தில் எப்போது நாங்கள் அனுமதியில்லாமல் சென்றதை பெரிய பிரச்சினையாக எழுப்பினர். அதனால் டெல்லி ஜேஎன்யுவில் 7 மணிக்கு நுழைவதற்கு அனுமதி கிடைத்தவுடன் நாங்கள் நுழைந்தோம் என்றனர்.

ஆர் எஸ் எஸ்
மேலும் சிலர் ஞாயிற்றுக்கிழமை 2.30 மணி முதல் காவல் துறை கட்டுப்பாட்டு அறைக்கு 50-க்கும் மேற்பட்ட முறை போலீஸுக்கு போன் செய்தனர். ஆனால் ஒரு பயனும் இல்லை என்கின்றனர். மாணவர் சங்க தலைவர் ஆயிஷ் கோஷ், ஆர் எஸ் எஸ் அமைப்பினர் கல்லூரிக்குள் நுழைந்துவிட்டனர் என வாட்ஸ்ஆப்பில் தெரிவித்துள்ளார்.
-
அரசியல் சதுரங்கத்தில் தோற்றுவிட்டேன்.. திமுகவில் இருந்து விலகியது ஏன்? விஜய் மாஜி மேனேஜர் விளக்கம் -
சிறகடிக்க ஆசை: விஜயா ஆட்டத்தை அடக்க வரும் புது மருமகள்.. சரியான பதிலடி கொடுத்த மீனா! சந்தோஷத்தில் மனோஜ் -
முதல் கூட்டத்திலேயே வானதிக்கு நோஸ் கட்.. கோவையில் ஆட்டத்தை ஆரம்பித்த பாஜக -
சவுதி அரேபியாவுக்கு வேட்டு வைக்கும் ஈரான்.. சூயஸ் கால்வாய்-க்கு செக்.. ஹாட்ஸ்பாட் ஆக மாறும் பாப் அல்-மண்டப்! -
கேஸ் சிலிண்டர் புக்கிங்கில் 35 நாட்கள் இடைவெளி.. புதிய 5 ரூல்ஸ் தெரியுமா? மானியம் வரவில்லைனா உஷார் -
தமிழக தேர்தல்.. எந்த கட்சிக்கு அரியணை ஏறும் வாய்ப்பு.. இதுவரை வந்த கருத்து கணிப்புகள்.. சொல்வது என்ன? -
நகைக்கடன் வைத்த 3 பேரில் ஒருவர் கவனிக்கலனா பிரச்சனை? RBI எச்சரிக்கை என்ன சொல்கிறது? -
2021 vs 2026.. அடியோடு மாறிய ஓ பன்னீர்செல்வம் சொத்து மதிப்பு.. மகன்கள் தந்த 3 கோடி கடன் -
நாதக கூட்டத்தில் ஒலித்த டிவிகே கோஷம்.. டீயாடா விக்கிறாய்? தற்குறிகள்! டென்ஷனான சீமான்..ஒரே பரபரப்பு -
கூட்டணி மாறியதால் தேமுதிகவுக்கு ராஜ்யசபா சீட் கொடுக்கலை! ஆனால் அது உண்மைதான்! எடப்பாடி பழனிசாமி -
ரூ.73 கோடி ட்விஸ்ட்.. விருதுநகரில் விஜய பிரபாகரன் அதிரடி.. புயலென கிளம்பும் மெகா பிசினஸ் சாம்ராஜ்யம் -
இனி யாராவது அத்துமீறுவீங்க.. எல்லையில் பாம்பு, முதலையை விடும் பிஎஸ்எப்? வங்கதேசத்துக்கு தூக்கம் போச்சு












Click it and Unblock the Notifications